பள்ளிபாளையம், டிச.19- தட்டாங்குட்டை பஞ்சாயத்து, ஓலப் பாளையம் வாட்டர் டேங்க் பகுதி அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தார் சாலை உள்ளிட்ட அடிப் படை வசதிகள் கேட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், ஓலப்பாளை யம் ஊருக்குள் செல்லும் தார்ச்சாலை பழுதடைந்து விட்டதால், உடனடியாக புதிய தார்ச்சாலை அமைத்து தர வேண் டும். சமீப காலமாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத் தில் இப்பகுதி பொதுமக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுவ தில்லை. எனவே வேலை வாய்ப்பு வழங் கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஓலப்பாளையம் கிளைச் செயலா ளர் கே.எம்.கதிர்வேல் தலைமை தாங்கி னார். இதில், பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய செயலாளர் சந்திரமதி, ஒன்றிய குழு உறுப்பினர் நடராஜன், மணிகண் டன், தேவராஜ், மற்றும் கிளை நிர்வாகி கள் மற்றும் பொதுமக்கள் திரளானோர் பங்கேற்றனர்.