மதுரை, மார்ச் 8- மதுரை மாநகராட்சி 73 ஆவது வார்டு அழகப்பன் நகர் பகுதிக்கு உட்பட்ட சிவ சிவா தெரு. பாண்டியன் நகர். சம்பந்தர் தெரு, டிவிஎஸ் நகர் ஆகிய பகுதிகளில் பாதாளச்சாக்கடை கழிவு நீர் வெளியேறு வது அதிகரித்து வருகிறது. இதனால் சுகா தாரச்சீர்கேடு ஏற்பட்டுள்ளது. தேங்கிய கழிவுநீரால் அப்பகுதியில் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதனை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கு - 2வது பகுதிக்குழு மற்றும் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் மாநக ராட்சி அலுவலகம் முன்பு புதனன்று ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் ஆர். சிவகுமார், கிளைச் செயலாளர் எஸ் என். நவாஸ், பகு திக்குழு செயலாளர் ஏ. எஸ். செந்தில் குமார் ஆகியோர் பேசினர். குடியிருப்போர் நலச் சங்கத்தினர் மற்றும் பாண்டியன் நகர் பள்ளிவாசல் ஜமாத்தினர் கலந்துகொண்ட னர். இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த திலகவதி என்ற பெண் கூறுகையில், கடந்த ஒரு மாதமாக கழிவுநீர் வெளியேறி வரு கிறது. இங்கு குடியிருந்த 2 குடும்பத்தினர் வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார்கள். மாநகராட்சியில் உள்ள அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார் கொடுத்தும் சரி செய்ய வருவதில்லை. அப்படியே வந்து சரி செய்தாலும் மீண்டும் கழிவுநீர வெளியேறி வருகிறது. அருகில் காலியாக உள்ள மனைகளில் தேங்கி கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தி யாகி வருகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நோய் பரவும் அபாயம் உள்ளது. கொசு மருந்து கூட தெளிப்பதில்லை. இத னால் இப்பகுதி மக்கள் பெரும் அவதிப்படு கின்றனர் என்றார். விஷ்ணு பிரகாஷ் என்பவர் கூறுகை யில், எங்களுடைய வீட்டை சுற்றி கழிவுநீர் தேங்கி நிற்கின்றது .கடந்த 10 நாட்களாக கழிவுநீர் வெளியேறுவது அதிகரித்துன் னது. அருகில் தனியார் நர்சரி பள்ளி இயங்கி வருகிறது .இங்கு படிக்கும் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது எனவே கழிவுநீரை அப்பு றப்படுத்துவதற்கும் பாதாள சாக்கடை நீர் முறையாக செல்வதற்கும் உரிய நட வடிக்கை எடுத்து நிரந்தர தீர்வு காண வேண்டும். தேங்கி நிற்கும் கழிவு நீரில் மருந்துகள் தெளிப்பதற்கு உரிய நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.