districts

img

மாமேதை காரல் மார்க்ஸ் அவர்களின் 140 ஆம் ஆண்டு நினைவு தினம்

அவிநாசி, மார்ச் 14 – திருமுருகன் பூண்டி அருகே அணைப்புதூர் தரைமட்டப் பாலத்தை சீரமைக்க மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி திருமுருகன்பூண்டி நகர கிளைகள் சார் பில் கோரிக்கை விடுத்துள்ளனர். திருமுருகன்பூண்டி நகராட்சிக்கு உட்பட்ட மூன் றாவது வார்டு அணைப்புதூர் பகுதி நல்லாற்றில்  பல வருடங்களுக்கு முன்பு அணை கட்டப்பட்டது.   இதன் அருகில் தரைமட்ட பாலமும் அமைந்துள் ளது. இந்த தரைமட்ட பாலத்தின் வழியாக அணைப்  புதூரிலிருந்து ராக்கியாபாளையம் செல்லும்  சாலையாகவும் பொதுமக்கள் பயன்படுத்தி  வருகின்றனர். இப்பகுதியில் விவசாயம் செழிப் பாக இருந்தபோது மழைக் காலத்தில் விவசாயி களுக்காக தண்ணீர் தேக்கி வைக்க அணையை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், விவசாயம் பொய்த்துப்போன காரணமாக, வீட்டுமனைகள் உருவானதில் அதனு டைய கழிவு நீர் மற்றும் அவிநாசி பகுதியில்  இருந்து  வரும் கழிவுநீரும்  அணையில் தேங்கி உள்ளது.  இதனைத் தொடர்ந்து அணையின் நீர் திறப்பு சிதல மடைந்த காரணத்தால் கழிவுநீர் தரைமட்ட பாலத் தின் வழியாக செல்லும் அவலம் உருவாகியுள் ளது. இதன் காரணமாக பொதுமக்கள் அச்சத்துடன் தரைமட்ட பாலத்தில் பயணிக்கும் சூழ்நிலை உள் ளது. உடனடியாக சிதலமடைந்த நீர்த்தேக்க  அணையை சீரமைக்க வேண்டும், தரைமட்ட  பாலத்தை உயர்மட்ட பாலமாக அமைத்து தர  வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  திருமுருகன்பூண்டி நகராட்சி கிளைகள் சார்பில்  மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ள னர்.