பழனி,ஜன.19- திண்டுக்கல் மாவட்டம் தொப்பம்பட்டி ஒன்றியம் பொரு ளூரைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் பி.என்.கந்தசாமி (வயது 85) அவர்கள் ஜனவரி 18 அன்று காலமானார். தோழர் பி.என்.கந்தசாமி ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தவர். பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இணைந்து செயல்பட்டார். பொருளூரில் கட்சியை கட்டுவதில் முக்கியப் பங்காற்றினார். ஒட்டன்சத்திரம், பழனி தாலுகாக்களில் கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பி னராகவும் விவசாயிகள் சங்கத்தில் பொறுப்பில் இருந்தும் செயல்பட்டவர். தோழரது மறைவுச் செய்தியறிந்து கட்சியின் மாவட்ட செயலாளர் ஆர் சச்சிதானந்தம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.வசந்தாமணி, கே.அருள்செல்வன், எம்.ராமசாமி, மூத்த தோழர் பி.கே.கருப்புசாமி மற்றும் பலர் அவரது உடலுக்கு மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினர்.