தமிழ் வளர்ச்சித்துறை விருது பெற்றவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பாராட்டினார்.
தமிழக அரசு குடியரசு தினத்தன்று தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும், தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள் மற்றும் தன்னலமற்ற தலைவர்கள் பெயரில், தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது. அவ்வகையில் தமிழ்நாடு அரசின் விருதுகளுக்கான விருதாளர்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதனன்று அறிவித்தார்.
அவ்வகையில், 2021ஆம் ஆண்டிற்கான சிங்காரவேலர் விருது கவிஞர் மதுக்கூர் இராமலிங்கத்திற்கும், உமறுப்புலவர் விருது நா. மம்முதுவிற்கும் புதனன்று அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து வியாழனன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் எம். என். எஸ். வெங்கட்ராமன், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் ஆகியோர் மதுரை தீக்கதிர் அலுவலகத்தில் கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம், இசை ஆய்வாளர் மற்றும் எழுத்தாளருமான நா. மம்முது ஆகியோரை பாராட்டி கைத்தறியடை அணிவித்து கௌவுரவித்தார்கள்.