districts

img

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழா

திருநெல்வேலி, டிச .15- ஆராய்ச்சியுடன் கூடிய கல்வியாக உயர்கல்வி இருக்க வேண்டும் .அந்த கல்வியானது சமுதாய மாற்றத் திற்கான வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்றும், இந்தியாவில் சராசரியாக 21.1சதவீதமாக உயர் கல்வி  இருக்கும் நிலையில்  தமிழகத்தில் உயர் கல்வியானது   41.4 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும், ஆசிரியர்கள் கல்லூரி பேராசிரியர்களுக்கு கல்வியில் நிபுணத்து வம் பெற்ற மற்ற இந்திய பல்கலைக் கழகங்களில் இருந்து பயிற்சி அளிக்கத் திட்டம் உள்ளது என   தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் 28வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. ஆளுநர் ஆர் .என். ரவி மற்றும்  உயர் கல்வித்துறை  அமைச்சர் பொன்முடி ஆகியோர் கலந்துகொண்டு பட்டங்களை வழங்கினர். கடந்த 2019-20,2020-21 ஆகிய இரண்டு கல்வி ஆண்டில் பட்டம் படித்து முடித்த வர்களுக்கு பட்டங்களும் வழங்கப்பட்டது .இதில் நேரடி யாக 1243 பேருக்கும் தங்கப் பதக்கங்கள் பெற்ற 204 பேருக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டன .கடந்த இரண்டு கல்வியாண்டில் மொத்தம் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 284  பேர் பட்டம் பெற்றனர். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பிச்சுமணி பேசும்போது,

பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சிக்காக தமிழக அரசு 20 கோடி ரூபா யில் நவீன தொழில்நுட்ப கருவிகளுடன் ஆய்வகம் ஏற்படுத்தி உள்ளதாகவும், தமிழக முதல்வரின் அறிவிப் பின்படி சுதந்திர போராட்ட வீரர் வ. உ. சிதம்பரனார் 150  ஆவது பிறந்த நாளை முன்னிட்டு வ. உ. சி .சிதம்பர னார் இருக்கை பல்கலைக்கழகத்தில் ஏற்படுத்தப்பட்டுள் ளதாகவும் தெரிவித்தார். மேலும் தென்மாவட்டங்களில் கீழடி, ஆதிச்சநல்லூர் போன்ற அகழ்வாராய்ச்சிகளில் தமிழகத்தின் தொன்மையான வரலாறு பண்பாடு வெளிப்படுத்தப்பட்டது. அதனடிப்படையில் பல்கலைக் கழகத்தில் அகழ்வாராய்ச்சி கல்வி மையம்  பல துறை களுடன் இணைந்து அமைக்கப்பட்டு உள்ளது எனவும் தெரிவித்தார். திருவனந்தபுரம் தேசிய அறிவியல் மற்றும் தொழில் நுட்ப இணைவு குல கழகத்தின் இயக்குனர் அஜய்கோஷ்  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டமளிப்பு உரை நிகழ்த்தினார்.  தலைமை பேருரை ஆற்றிய தமிழக ஆளுநர் ஆர். என். ரவி மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலான பாரம்பரிய  அறிவுடைய நமது பண்பாட்டுடைய கல்வியையும் ஒருங்கிணைத்து மருத்துவம் உள்ளிட்ட உயர் கல்வி யில் பாடத்திட்டம் இருக்க வேண்டும் என்றார். மேலும் கல்வியில் ஆராய்ச்சியுடன் கூடிய படிப்புகள் இருக்க வேண்டும் .பெரிய  கனவுகள் வேண்டும் அதை நிறை வேற்றும் வரை கடினமாக உழைக்க வேண்டும் .தன்னம் பிக்கை யை ஒருபோதும் இழக்கக் கூடாது என்றார்.