கடமலைக்குண்டு, ஜுலை 23- கடந்த 3 மாதங்களாக மணிப்பூர் மாநிலத்தில் நிகழ்ந்துவரும் இனப் படுகொலையை தடுக்கத்தவறிய ஒன்றிய -மாநில அரசுகளைக் கண்டித்தும் பெண்களை கொடூர மாக பாலியல் வல்லுறவு செய்த கயவர்கள் அனைவரையும் கைது செய்து கடும் தண்டனை அளிக்க வேண்டும். மணிப்பூர் மாநில அரசை கலைக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் போராட்டங் கள் நடைபெற்று வருகின்றன. தேனி மாவட்டம். கடமலைக் குண்டு கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட மலை-மயிலை ஒன்றிய செயலா ளர் போஸ் தலைமை தாங்கி னார். விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கண்ணன் உரையாற்றி னார். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பாரதி, ராஜாராம், ராஜேந்திரன், தங்கப்பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். கடலாடி சிக்கல் இராமநாதபுரம் மாவட்டம், கட லாடி சிக்கல் மையத்தில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேடை ஒருங்கிணைப்பாளர் கே பச்சமால் தலைமை வகித்தார். துணை ஒருங்கிணைப்பாளர் அம் ஜத் கான் முன்னிலை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என். வெங்கடேஷ். சிபிஎம் தாலுகா செய லாளர் எஸ். போஸ், திமுக காதர் மைதீன், ஊராட்சி மன்ற தலைவர் மிசா சைபுதீன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் நூருல் ஹமீது, மதிமுக குத்புதீன், எஸ்டிபிஐ காஜா ஆகியோர் பேசினர். நிறைவாக முனைவர் செ. சுந்தர வள்ளி கண் டன உரையாற்றினார். 50 பெண்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பழனி பழனி பேருந்து நிலையம் அருகே இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு),இந்திய கட்டு மான தொழிலாளர் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்டு மான சங்க மாவட்டத் தலைவர் முரு கேசன் தலைமை வகித்தார். சிஐ டியு மாவட்டச் செயலாளர் பிரபா கரன், நிர்வாகிகள் பேரா.மோகனா, பிச்சைமுத்து, பாலன் ஆகியோர் பேசினர்.