districts

img

அரசியலமைப்பு சட்டத்தை கேலிக்குள்ளாக்குவதா?

கோவை, ஜன.12- தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக  நடந்துகொள்ளும் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்தும், ஆளுநரை திரும்பப்பெற வலியு றுத்தியும் கோவையில் வழக்கறி ஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். தமிழ்நாட்டின் பண்பாடுகள் குறித்த எந்த புரிதல் இல்லாமலும், அரசியலமைப்புச் சட்டத்தின்படி நடந்து கொள்ள தவறிய ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி  கோவையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  கோவை ஒருங்கிணைந்த நீதி மன்ற வளாகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜோதிகுமார், மூத்த தலைவர் சுந்தரமூர்த்தி, வழக்கறிஞர்கள் தண்டபாணி, அருள்மொழி, மயில் வாகனம், சிவஞானம், சிவகாமி தமிழன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.  இதில், தமிழ்நாட்டிற்கு விரோத மாக செயல்படும் ஆளுநரை ஒன்றிய அரசு திரும்ப பெற  வேண்டும். தமிழ்நாடு சட்டப் பேரவை கூட்டத்தொடரில், கலந்து  கொண்ட ஆளுநர் அரசியல மைப்புச் சட்டத்தின் படி நடந்து கொள்ளலாமல், சனாதனம், பார்ப் பனியம் என பேசி வருவதையும் கண்டித்து முழக்கங்களை எழுப் பினர். 

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் கூறுகை யில், கடந்த ஒரு வருடமாகவே ஆளுநரின் பேச்சுக்களும், நடவ டிக்கைகளும் தமிழ் இனத்திற்கும்,  தமிழ் மொழிக்கும், தமிழ்நாட் டிற்கும் எதிரானதாகவே உள்ளது.  இந்திய அரசியல் சட்டத்தையே கேலிக்குள்ளாக்கும் ஆளுநர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று இந்த ஆர்ப்பாட் டத்தை நடத்துகிறோம். இனி அடுத்த கட்ட தீவிரமான போராட்டத் திற்கு வழக்கறிஞர்கள் தயாரா வோம், என்றனர்.

தருமபுரியில் சிஐடியு ஆர்ப்பாட்டம்

 தருமபுரி, ஜன.12- இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படும் தமிழ்நாடு ஆளுநர் ரவியை கண்டித்து சிஐடியு சார்பில் தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு வியாழனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலக்குழு உறுப்பினர் சி.கலாவதி  தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சி.நாகராசன், மாவட்ட செயலாளர் பி.ஜீவா,  மாவட்ட நிர்வாகிகள் சண்முகம், அங்கம்மாள்  ஆகியோர் கண்டன உரையாற்றினார். இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராகவும், மக்க ளால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக செயல்பட்டு வரும் தமிழ்நாட்டு ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி திரளானோர் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினர்.