districts

img

தேசிய அளவிலான சிலம்பப் போட்டியில் சாதித்த மதுரை மாணவர்கள்

மதுரை, நவ.28- கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தேசிய அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது. கர்நாடகம், கேரளம், ஆந்திரம், தெலுங்கானா மாநிலங்களில் இருந்து இரண்டாயிரம் பேர் கலந்துகொண்டனர்.  இந்தப் போட்டியில் மதுரை செல்லூர் மீனாம்பாள்பரம் பகுதியில் உள்ள ஏ.கே. சிலம்பம் பள்ளி தலைமைப் பயிற்சியாளர்கள் ஏ.கே.அருண், ஏ.கே.தினேஷ் தலைமையில் 26 மாணவர்கள் கலந்துகொண்டனர். இவர்களில் முதல் பரிசை 15 மாணவர்கள் இரண்டாவது பரிசை நான்கு மாணவர்கள், மூன்றாவது பரிசை மூன்று மாணவர்கள் வென்றுள்ளனர் . தனித்திறமை பிரிவில் ஒருவர், முதலிடம். மற்றொருவர் இரண்டாமிடம். மூன்றாம் இடத்தில் இரண்டு மாணவிகளும் வெற்றி பெற்றனர். வெற்றியாளர்கள் திங்களன்று மதுரை மக்களை உறுப்பினர் சு.வெங்கடேசனை சந்தித்து அவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு அலுவலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்கள். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். பயிற்சியளித்த சிலம்ப பள்ளி ஆசிரியர்கள் அருண், தினேஷ் ஆகியோரையும் மக்களவை உறுப்பினர் பாராட்டினார் அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன், மாவட்டச் செயலாளர் மா.கணேசன், வடக்கு - 2-ஆம் பகுதிக் குழுச் செயலாளர் ஏ.பாலு, செயற்குழு உறுப்பினர்கள் அ.ரமேஷ், ஜா.நரசிம்மன், வை.ஸ்டாலின் மாவட்டக்குழு உறுப்பினர் கே.அலாவுதீன், வாலிபர் சங்க சிலம்ப பயிற்சி பள்ளி ஆசிரியர் வடிவேல், கட்டுமான தொழிலாளர் சங்கத் தலைவர் எஸ்.சங்கர், செயலாளர் கே.ஜாகிர் உசேன், பி.ஆறுமுகம் ஆகியோர் உடனிருந்தனர்.