districts

img

சாத்தான்குளம் அருகே பதுக்கிய 2 ஆயிரம் கிலோ கஞ்சா பறிமுதல்

மதுரை, மே 10- தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக,  சாத்தான்குளம் அருகே பதுக்கி வைத்திருந்த 2 ஆயிரம் கிலோ கஞ்சா வை மதுரை மாநகரக் காவல்துறை தனிப்படை யினர்  பறிமுதல் செய்து 6 பேரை கைது செய்த னர். மதுரையில் காவல்துறையினர்  நடத்திய  வாகனச்சோதனையில் கஞ்சா கடத்திய 2 பேர்  பிடிபட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணை யில் இலங்கைக்கு கடத்துவதற்காக  தூத்துக் குடி அருகே பெரிய அளவில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதை யடுத்து மாநகரக் காவல்துறையின் தனிப்படை யினர் அங்கு சென்று 2 ஆயிரம் கிலோ கஞ்சா வை பறிமுதல் செய்து மதுரைக்கு கொண்டு  வந்தனர். இந்நிலையில் கீரைத்துறை காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 2 ஆயிரம் கிலோ கஞ்சாவை புதனன்று  பார்வையிட்ட மாந கரக்காவல் துணை ஆணையர் பி.கே.அர விந்த் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமி ழகம் முழுவதும் கஞ்சா கடத்தல் மற்றும் விற்ப னையைத் தடுக்கும் வகையில் காவல்துறை சார்பில் வேட்டை 4.0 என்ற பெயரில் தீவிர நட வடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  மதுரையில் பல்வேறு கஞ்சா கடத்தல் வழக்கு களில் தொடர்புடைய  ராஜ்குமார் மற்றும் ஜெ.கே  என்ற ஜெயக்குமார் ஆகியோரை  தனிப்படை யினர் தீவிர மாக தேடி வந்தனர். இந்நிலை யில் மதுரை சுற்றுச்சாலை பகுதியில் வாகனம் மூலம் கஞ்சா கடத்தப்படுவதாக கீரைத்துறை  காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கருப்ப சாமிக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை இரவு  சுற்றுச்சாலை சென்று சந்தேகத்துக்குரிய வகையில் வந்த காரை நிறுத்தி சோதனையிட்ட போது அதில் 40 கிலோ கஞ்சா கடத்தி வரப்படு வது தெரியவந்தது.

இதையடுத்து காரின் ஓட்டுநர் மதுரை எல்லீஸ்நகர் குடியிருப்பைச் சேர்ந்த ராஜ்குமாரை கைது செய்து விசாரித்த போது, அவர் ஏற்கெனவே கஞ்சா வழக்குகளில் தேடப்பட்டு வருபவர் என்பதும், மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த சுகுமாறன், தூத்துக்குடியைச் சேர்ந்த ராஜா, சுடலைமணி, மகேஸ்குமார் மற்றும் முத்துராஜ் ஆகியோரு டன் சேர்ந்து, மதுரை கோ.புதூரை சேர்ந்த ஜெ.கே என்ற ஜெயக்குமார் என்பவர் மூலம் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் இருந்து கஞ்சாவை மொத்தமாக  வாங்கி போலியான பதிவெண் கொண்ட கண்டெய்னர் வாகனம் மூலம் கடத்தி வந்து,  தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகில் உள்ள வேலவன் புதுக்குளம் என்ற கிராமத்தில்  ராஜா என்பவ ரின் பொறுப்பில் உள்ள தோட்டத்தில் பதுக்கி வைத்திருப்பதாகவும், அதிலிருந்து 40 கிலோ கஞ்சாவை மதுரைக்கு எடுத்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து கீரைத்துறை காவல் ஆய்வாளர் பெத்துராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தென் மண்டல காவல்துறைத்தலைவர் அஸ்ராகார்க் மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினரின்  ஒத்துழைப்போடு,  தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகில் உள்ள வேலவன்  புதுக்குளம் கிராமத்தில் உள்ள தென்னந்தோப் புக்கு புதன் கிழமை சென்றனர். அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்த போது, அந்த வாகனத்தில் சாக்கு மூட்டைகளில் 2 ஆயிரம் கிலோ கஞ்சா பதுக்கி வைத்தி ருந்தது தெரிய வந்தது. இதையடுத்து 2 ஆயி ரம் கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த தனிப்படையினர்,  தென்னந்தோப்பில் இருந்து தப்ப முயன்ற  மதுரை ஜெய்ஹிந்த்புரம்  ஜீவா நகர்  2 ஆவது தெருவைச் சேர்ந்த சுகுமாறன் (27),  தூத்துக்குடி ஜார்ஜ் சாலையைச் சேர்ந்த  ராஜா(33), தூத்துக்குடி மில்லர்புரம் மேற்  குத்தெருவைச் சேர்ந்த சுடலைமணி(21), தூத்துக்குடி அண்ணாநகரைச் சேர்ந்த மகேஸ்குமார்(29), மில்லர்புரம் மேற்கு 2ஆவது தெருவைச் சேர்ந்த முத்துராஜ் ஆகிய  5 பேரையும் காவல்துறை  கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், மதுரையை சேர்ந்த ஜெ.கே என்ற ஜெயக்குமார் மூலம் ராஜமுந்தி ரியில் இருந்து ரூ.4 கோடி மதிப்பில் 2090 கிலோ  கஞ்சாவை  வாங்கி வாகனங்கள் மூலம் கடத்தி வந்து, தூத்துக்குடியைச் சேர்ந்த ஆரோன் என்பவர் மூலம் கடற்கரை பகுதிகளில் விற்பனை செய்து வருவதாகவும், மேலும் இலங்கைக்கும் படகு மூலம் கடத்துவதற்கு பதுக்கி வைத்திருந்து படகுக்காக காத்திருந்த தாகவும் தெரிவித்தனர். மேலும்   ஆந்திரா வில் இருந்து கஞ்சா ஏற்றி வந்த வாகனத்தை மதுரை கோச்சடை பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்திருப்பதாக தெரிவித்தனர்.இதை யடுத்து கோச்சடைக்கு சென்ற காவல்துறை யினர்  வாகனத்தையும் அதில் இருந்த 50 கிலோ  கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டதோடு 2090 கிலோ கஞ்சா,  கஞ்சா கடத்த பயன்படுத்தப்பட்ட 2 கார்கள், 1 கண்டெய்னர் வாகனம், 8 கைப்பேசி கள், ரூ.25 ஆயிரம் ஆகியவை பறிமுதல்  செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்த வழக்கில்  தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளி களான ஜெ.கே. என்ற ஜெயக்குமார் மற்றும்  ஆரோன் ஆகிய இருவரையும் காவல்துறை யினர்  தீவிரமாகத் தேடி வருகின்றனர்.  மதுரை யில் இதுவரை பிடிபட்ட கஞ்சா கடத்தல் சம்ப வங்களில் தற்போது மிகப்பெரிய அளவு பிடி பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது என்று தெரி வித்தார்.