மதுரை மாநகராட்சி 86 ஆவது வார்டு வில்லாபுரம் அம்மச்சியாத்தா கோவில் தெருவில் கடந்த 15 தினங்களாக பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல முடியாமல் இருந்தது. இதுகுறித்து துணை மேயர் தி.நாகராஜனிடம் அப்பகுதியில் உள்ள பொதுமக்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் புகார் தெரிவித்த நிலையில் வியாழனன்று அங்கு கழிவுநீரகற்றும் வாகனத்தை வரவைத்து கழிவு நீரை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது தொடர்ந்து பணி நடைபெறும் இடத்தை துணை மேயர் ஆய்வு மேற்கொண்டார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதிக்குழு உறுப்பினர் பாண்டியராஜன், மாதர் சங்க மாவட்டக்குழு உறுப்பினர் சாந்தி ஆகியோர் உடனிருந்தனர்.