மதுரை, மே 13- மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தமது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக கல்வி, மருத்துவமனைப் பணி களுக்கு கூடுதல் நிதி ஒதுக் கீடு செய்துவருகிறார். இந்த நிலையில் மதுரை மாநகராட்சிப்பள்ளிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலை யங்களில் தொகுதி மேம் பாட்டு நிதியின் மூலம் நடை பெற்றுவரும் பணிகளை சு. வெங்கடேசன் ஆய்வு செய் தார். மதுரை பாத்திமா நகர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 10 லட்சம் மதிப்பில் ஆய்வக மேற் கூரை, மருத்துவர் அறை மேற்கூரை, நுழைவாயிலில் பேவர் பிளாக் பதிக்கும் பணி, நோயாளி வார்டில் கழிப் பறை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
கரிமேடு மகப்பேறு ஆரம்ப சுகாதார மையத்தில் ரூ.10லட்சம் மதிப்பில் கட் டப்பட்டு வரும் கூடுதல் கட்ட டம், சேதுபதி பாண்டித்துரை மேல்நிலைப்பள்ளியில் ரூ.5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டடம், மதுரை மாநகராட்சி வெள்ளிவீதி யார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமார் ரூ.16 லட் சம் மதிப்பில் புதிதாகக் கட் டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை கட்டடம் அமைக் கும் பணிகளை மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், மாநக ராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜித் சிங், மாநகராட்சி செயற் பொறியாளர் அரசு, மண்ட லம்- 2 ஆணையாளர் வர லெட்சுமி, துணை மேயர் டி. நாகராஜன், மண்டலத் தலைவர் சரவணபுவனேஸ் வரி ஆகியோர் சனிக்கிழமை ஆய்வு செய்தனர். மக்க ளவை உறுப்பினருடன் மாமன்ற உறுப்பினர்கள் வை. ஜென்னியம்மாள், சோலை செந்தில்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர் மாவட்டச் செயலாளர் மா. கணேசன், மாவட்டச் செயற் குழு உறுப்பினர் ஜா.நர சிம்மன், பகுதிக்குழு செய லாளர்கள் கு.கணேசன், ஸ்டாலின், மாவட்டக்குழு உறுப்பினர் ஏ. பாண்டி, ஆகியோர் வந்திருந்தனர். முன்னதாக கரிமேடு ஆரம்ப சுகாதார மையத்தில் நடைபெற்ற உலக செவி லியர் தின விழாவை செவி லியர்கள் கேக் வெட்டி கொண்டாடினர். நிகழ்வில் பங்கேற்ற மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் செவிலியர்களின் சேவை களைப் பாராட்டினார்.