districts

img

மதுரை அழகர்கோவில் சாலையில் அமைந்துள்ள மதுரை காமராசர் பல்கலைக்கழக கல்லூரி

விருதுநகர், மார்ச் 17- மதுரை மாவடடம் திருமங்க லம் முதல் மதுரை வரை நடை பெறும் இரட்டை ரயில் பாதைப் பணிகள்  மிகவும் மந்த கதியில் நடைபெறுகிறது. இப்பணியை துரிதப்படுத்தி ரயில் சேவையை தொடங்க வேண்டுமென பொது மக்கள் மற்றும் ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தின் தலைநகர் சென்னை, கோயம்புத்தூர், பெங் களூரு, மும்பை, திருச்சிராப் பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தென் மாவட்டங்களுக்கு கூடுதலாக ரயில்கள் இயக்க வேண்டுமென தொடர்ந்து கோரி க்கை எழுந்து வந்தது. இதன் கார ணமாக, மதுரை-நாகர்கோவில் வரை இரட்டை ரயில் பாதை பணி கள் கடந்த 2018- ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் மொத்த  மதிப்பீடு ரூ.3 ஆயிரம் கோடியா கும். இதில் மதுரை- வாஞ்சி மணி யாச்சி, வாஞ்சி மணியாச்சி- நெல்லை, நெல்லை-திருவனந்த புரம் என மூன்று கட்டங்களாகப் பிரித்து இரட்டை ரயில் பாதைப் பணிகள் நடைபெற்று வந்தன. இப்பணிகள் வரும் 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நிறைவடைய வேண்டுமென அறி விக்கப்பட்டது. இந்த நிலையில், திருமங்க லம்-துலுக்கபட்டி ரயில் நிலையம் வரையுள்ள 41 கி.மீ தூரத்திற்கான  பணிகள்  கடந்த 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நிறைவடைந் தது. இதையடுத்து ரயில்வே பாது காப்பு ஆணையர் அபாய்குமார் ராய் தலைமையில் ரயில் சோதனை ஓட்டம் நடத்தினார். தற்போது, அவ்வழியே ரயில்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில், முக்கியப் பகுதியான திருமங்கலம், திருப்ப ரங்குன்றம், மதுரை இடையே உள்ள சுமார் 20 கி.மீ தூரத்தில் ரயில் பாதைக்கு தேவையான எல்லைக் கற்கள் நடும் பணி மற்றும் நிலம் கையகப்படுத்தும் பணி ஆகியவை நிறைவடைந்து விட்டது.

ரயில் பாதைப் பணிக்குத் தேவையான சிமிண்ட் கற்கள்  திருமங்கலம் சுங்கச் சாவடி  அருகே அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. ஆனால்,   இரட்டை ரயில் பாதை அமைக்கும்  பணி மிகவும் மந்த கதியில் நடைபெற்று வரு கிறது. இதனால், தென் மாவட்டத் திலிருந்து மதுரை நோக்கிச் செல்லும் அனைத்து  ரயில்களும், திருமங்கலம் அல்லது மதுரை  ரயில் நிலையத்தில் கிராசிங்கிற் காக நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. பொதுவாக விருதுநகர் உள் ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கல்வி, மருத்துவம் மற்றும் வியாபாரம் உள்ளிட்ட வைகளுக்காக மதுரையைச் சார்ந்து இருக்கும் நிலை உள் ளது. எனவே, அடிக்கடி  ரயில் களில் பயணம் செய்கின்றனர். அடிக்கடி கிராசிங்கில் ரயில்கள்  சிக்கிக் கொள்வதால், மக்கள்  சரி யான நேரத்தில் தாங்கள் விரும் பிய இடத்திற்கு செல்ல முடிய வில்லை. தென் மாவட்டங்க ளுக்கு கூடுதலான ரயில்களை இயக்க முடியாத நிலையும் இருந்து வருகிறது. இதுகுறித்து ரயில்வே நிர்வா கத்தினர், கடந்த ஜனவரி  மாதம் கொரோனா மூன்றாவது  அலை  காரணமாக தொழிலாளர்கள் பணிக்கு வராத காரணத்தால், இரட்டை ரயில் பாதைப் பணி களில்  காலதாமதம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கின்றனர்.  ரயில் பாதைப் பணிக்குத் தேவையான மணல் உள்ளிட்ட கட்டுமானப் பொருட் கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்ட தாலும் பணிகள் தொடர்ந்து நடை பெறவில்லையெனக் கூறுகின்ற னர். திருமங்கலம்-மதுரை  இரட்டை ரயில் பாதைப்பணிக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடு த்து பணிகளை விரைவுபடுத்தி,  ரயில் சேவையை  தொடங்க வேண்டுமென பொது மக்கள் மற்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.