districts

img

மதுரை கூடல்நகர் இரண்டாவது ரயில்முனையம்... கையை விரித்தது தென்னக ரயில்வே... சென்னை-மதுரை-போடி ரயில் சேவையும் ஒத்திவைப்பு

மதுரை, பிப்.4 கூடல்நகர் ரயில் நிலையத்தை இரண் டாவது முனையமாக்குவது திட்டத்தால் பயணிகளுக்கு நிறைய சிக்கல்கள் இருப்ப தால், தற்போதைக்கு வாய்ப்பு இல்லை என கையை விரித்துவிட்டார் தென்னக ரயில்வே மேலாளர். கூடல்நகரை இரண்டாவது ரயில் முனையமாக்குவது மதுரையின் வளர்ச்சி க்கு உதவும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர், புறநகர் மாவட்ட மாநாடுகளில் தீர்மானம் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு ஒன்றிய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது. மதுரை மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு மக்கள் பணியாற்றி மறைந்த தோழர்.பொ.மோகன் தொ டர்ந்து வலியுறுத்தி வந்தார். இப்போது மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்க டேசன் இதற்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். சமீபத்தில் நடை பெற்ற ரயில்வே ஆலோசனைக் கூட்டத் தில் பங்கேற்ற ஆலோசனைக்குழு உறுப்பினர் பாலவேலனிடம் கூடல்நகர் ரயில் முனையத்திற்கு அழுத்தம் கொ டுங்கள் என வலியுறுத்தி அளிக்கப்பட்ட கோரிக்கை மனுக்களின் மீது அவரும் பேசியுள்ளார்.  அன்றைக்கு இருந்த அதிகாரிகள் கூடல்நகர் இரண்டாவது ரயில் முனையம் அவசியம். நிறைவேற்றப்படும் என வாக்குறுதியளித்த நிலையில், தற்போது பொறுப்பேற்றுள்ள ரயில்வே கோட்ட மேலாளர் “பயணிகளுக்கு சிக்கல் இருப்ப தால்” எனக் கூறி கையை விரித்துள்ளார். அன்று அதிகாரிகள்-மக்கள் கூறியது: மதுரை சந்திப்பு ரயில் நிலையத்திலி ருந்து ரயில் வழித்தடத்தில் இரண்டு கிலோ மீட்டர் தொலைவிலும், சாலை மார்க்கத்தில் ஆறு கிலோ மீட்டர் தொலை விலும் உள்ள கூடல் நகர் ரயில் நிலை யம், பயிற்சி மையமாகவும்,

இரண்டாம்  நிலை முனையமாகவும் மாறும். ரூ.30 கோடி செலவில் செயல்படுத்தப்படும் திட்டத்திற்கு தெற்கு ரயில்வே தலைமை யகம் ஒப்புதல் அளித்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். குறிப்பாக, 2016-2017-ஆம் ஆண்டில் கோட்ட ரயில்வே மேலாளராக பொறுப்பு வகித்த சுனில் குமார் கார்க் ஊடகங்களிடம் கூறுகையில், “ எதிர்கா லத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, கூடல் நகர் நகரின் பயிற்சி மையமாக மாறும். மதுரை சந்திப்பில் புதிய ரயில்கள் எதுவும் நிறுத்த இடமில்லை. எனவே, நகரின் அந்தப் பகுதி வேகமாக வளர்ச்சி யடைந்து வருவதால், திருச்சிராப்பள்ளி நோக்கிச் செல்லும் ரயில்கள் நிறுத்தக் கூடிய அடுத்த முனையமாக கூடல் நகரை உருவாக்க வேண்டும்.” என்றார். அது மட்டுமல்ல, “ மதுரைச் சந்திப்பில் நெரிசலைக் குறைக்க கூடல்நகர் ரயில் நிலையத்தைப் பயன்படுத்த வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையைத் தொடர்ந்து செயற்கைக் கோள் ரயில் முனையமாக மாற்றுவது வடிவம் பெற்றுள்ளது. கூடல் நகர் ரயில் நிலை யத்தில் கோச்சிங் யார்டு மற்றும் கூடுதல் பிட் லைன்களை விரிவாக்கம் செய்ய போதுமான இடம் உள்ளது” என்றார்..  அது மட்டுமல்ல 2016-ஆம் ஆண்டு ரயிலார் நகரைச் சேர்ந்தவரும் ரயில்வே யில் பணியாற்றி ஓய்வு பெற்றவருமான கே.முத்தையா கூறுகையில், “மதுரை ரயில் நிலையம் மக்கள் கூட்டத்தால் மூச்சு திணறுவதற்கு முன் கூடல் நகர் ரயில் நிலையத்தை பயன்பாட்டிற்குக் கொண்டு வரவேண்டும். பாண்டியன் எக்ஸ்பிரஸ் மற்றும் தெற்கு நோக்கிச் செல்லும் பிற ரயில்கள், மதுரை சந்திப்பில் சிக்னல் அனுமதி கிடைக்காதபோது கூடல் நகரில் நீண்ட நேரம் நிறுத்தப்படுகின்றன. அந்த வாய்ப்பை கூடல்நகர் ரயில் நிலையத்தில் நிறுத்துவதற்கு பயன்படுத்தாலம் என்றார்.  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவராக இருந்த எஸ்.ரத்தினவேலு கூறுகையில், “சென்னை மாம்பலத்திலிருந்து தெற்கு நோக்கி வரும் ரயில்கள் அனைத்தும் கூடல்நகரில் நிறுத்தப்பட்டால், வைகை ஆற்றின் வடக்கில் உள்ள நகர்ப் பகுதிகளில் வசிப்பவர்கள் பயனடைவார்கள். இதன் மூலம் மதுரை நகரின் பிரதான சாலைக ளில் நெரிசல் குறையும் என்றார். (இந்தச் செய்திகள் அனைத்தும் 2016-ஆம் ஆண்டு ஜனவரி, ஆகஸ்ட் மற்றும் 2017-ஆம் ஆண்டு அக்டோபர் மாதங்களில் வெளியானவை.)
இன்றைய நிலை
“மதுரை ரயில் நிலையத்தில் ஏற் பட்டுள்ள போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண கூடல்நகர் ரயில் நிலையத்தை இரண்டாவது முனையமாக்குவது பற்றி கேட்கிறீர்கள். அந்த திட்டத்தால் பயணிக ளுக்கு நிறைய சிக்கல்கள் இருப்பதால், தற்போதைக்கு வாய்ப்பு இல்லை. (தினத்தந்தி 4-2-2023) கோட்ட மேலாளர், ஆனந்த் “ பயணிக ளுக்கு ஏற்படும் சிக்கல்களை தீர்த்து வைத்து பல கோடி செலவில் கட்டப் பட்டுள்ள ரயில் நிலையத்தை பயன்படுத்த வேண்டும். ஏற்கனவே ரயில் திட்டங்களில் தமிழ்நாட்டை பிரதமர் மோடி தலைமை யிலான ஒன்றிய அரசு வஞ்சித்து வரு கிறது. போதாக்குறைக்கு மதுரை கோட்ட மேலாளர் அளித்துள்ள விளக்கம் எரிகிற தீயில் எண்ணெய்யை ஊற்றுவது போல் உள்ளது. மதுரையின் வளர்ச்சியில் ஆர்வமாக உள்ளவர்களும், மக்கள் பிரதிநிதிகளும் இரண்டாவது ரயில் முனையத்திற்கு குர லெழுப்பி இந்தாண்டின் இறுதியிலாவது ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வெள்ளிக்கிழமை செய்தியா ளர்களிடம் பேசிய கோட்ட மேலாளர் “பிப்ரவரி 11-ஆம் தேதி முதல் மதுரையில் “யார்டு மறுவடிவமைப்புப் பணிகளுக்கு” திட்டமிடப்பட்டுள்ளதால் சென்னை-மதுரை-சென்னை விரைவு ரயில் சேவையை போடிநாயக்கனூர் வரை நீட்டிக்கும் திட்டம் மார்ச் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. “யார்டு ரீ-மாட லிங் பணி மார்ச் மாதத்தில் முடிவடைந்த வுடன் போடி வரை ரயில் இயக்கப்படும். மார்ச் மாத இறுதிக்குள் மதுரை- மீள விட்டான் இடையே இரண்டாவது ரயில் பாதை அமைக்கப்படும். மதுரை ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட 15 ரயில் நிலையங்கள் அமிர்த பாரத் ரயில் நிலையத் திட்டத்தில் மேம்படுத்தப்படும். இதில் அம்பாசமுத்திரம், காரைக்குடி, கோ வில்பட்டி, பழனி, பரமக்குடி, இராமநாத புரம், இராஜபாளையம், சோழவந்தான், திருவில்லிபுத்தூர், தென்காசி, திருச் செந்தூர், விருதுநகர் உள்ளிட்டவை அடங்கும்” என்றார்.