மதுரை, மார்ச் 30- மதுரை மாவட்டம் சமய நல்லூர் செக்கடித் தெருவில் வசித்து வந்த மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் உறுப்பினர் தோழர் எஸ்.வசந்தா அவர்கள் காலமா னார். இவர் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் முன்னாள் நகரச் செயலாளர் எம் முனியாண்டியின் மகன் எம். சுப்பிரமணியின் மனைவி ஆவார். தோழர் எஸ்.வசந்தா மேற்கு - 1 ஆம் பகுதி கே.பி. ஜானகி அம்மாள் நகர் பகுதியில் இருந்து கட்சிப் பணியாற்றினார். சமய நல்லூர் செக்கடித்தெருவில் தனது மகள் வீட்டில் வசித்து வந்த இவர் செவ்வாயன்று காலமானார். அவரது மறைவுச் செய்தியறிந்து கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் மா. கணேசன், புறநகர் மாவட்டச் செயலாளர் கே. ராஜேந்திரன், மாநிலக்குழு உறுப்பி னர்கள் இரா.விஜயராஜன், எஸ். கே. பொன்னுத்தாய், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மாநகர் ஜா. நர சிம்மன், வை. ஸ்டாலின், புறநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி. உமா மகேஸ்வரன், மேற்கு - 1 ஆம் பகு திக்குழு செயலாளர் கு. கணேசன், மேற்கு ஒன்றியச் செய லாளர் பி. ஜீவனந்தம், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டத் தலைவர் பி.வீரமணி மற்றும் பலர் மாலை யணிவித்து அஞ்சலி செலுத்தினர்.