மதுரை, டிச.1- மதுரை மாவட்ட கட்டிட தொழிலாளர் சங்க 27-வது ஆண்டு மாவட்டப் பேரவை மாவட்டத் தலைவர் ஏ. ராஜேந்தின் தலைமையில் ஞாயிறன்று நடைபெற்றது. மாவட்ட பேரவை கொடி யை மாவட்ட நிர்வாகி எம். மங்களம் ஏற்றினார். அஞ்சலி தீர்மானத்தை எல்.ஞான சுந்தரம் முன்மொழிந்தார். கே.ஜாகீர் உசேன் வர வேற்று பேசினார். சிஐடியு மாவட்டத் தலைவர் இரா. தெய்வராஜ் துவக்கி வைத்து பேசினார். வேலை யறிக்கையை மாவட்டச் செயலாளர் சி.சுப்பையா, பொருளாளர் ஜே.லூர்து ரூபி வரவு - செலவு அறிக் கையை முன் மொழிந்தனர். சிஐடியு மாவட்ட உதவி தலைவர் ஜி.ராஜேந்திரன் வாழ்த்திப் பேசினார். சிஐடியு மாவட்ட செயலா ளர் இரா.லெனின் நிறைவுரை யாற்றினார். 49 பேர் கொண்ட புதிய நிர்வாகக்குழு தேர்வு செய் யப்பட்டது. மாவட்டத் தலை வராக ஏ. ராஜேந்திரன், பொதுச் செயலாளராக ஜே. லூர்து ரூபி, பொருளாளராக எல்.ஞானசுந்தரம் ஆகி யோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். எம்.நாச்சிமுத்து நன்றி கூறினார். கட்டுமான நலவாரி யத்தின் மூலம் செயல்படும் ஆன்லைன் சர்வரை மேம் படுத்தி தொழிலாளர்கள் எளிமையாக பதிவு செய்ய தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும். கட்டு மான வாரியத்தின் மூலம் வழங்கப்படும் உதவிகளை இரட்டிப்பாக்கி வழங்க வேண்டும். பெண்களுக்கு 50 வயதில் பென்சன் வழங்க வேண்டும். பென்சனை ரூ.3,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். தமிழக அரசு ஆண்டுக்கு 10 ஆயி ரம் வீடு வழங்கும் திட்டத்தை விரைவுப்படுத்தி செயல் படுத்த வேண்டும். புதுச்சேரி அரசு வழங்குவதைப் போல் தமிழக கட்டுமானத் தொழிலாளர்களுக்கு தீபா வளி போனஸ் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று தீர் மானங்கள் நிறைவேற்றப் பட்டன.