மதுரை மாநகராட்சி வில்லாபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் 6 மாதம் முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ சொட்டு மருந்து வழங்கும் முகாமினை மேயர் இந்திராணி பொன்வசந்த் செவ்வாயன்று துவக்கி வைத்தார். நிகழ்வில் துணை மேயர் தி.நாகராஜன், ஆணையாளர் கே.ஜே.பிரவீன்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி நகர்நல அலுவலர் மரு.ஸ்ரீகோதை, மாமன்ற உறுப்பினர் பூமா உட்பட பலர் கலந்து கொண்டனர்.