districts

img

தொடரும் பாதாளச் சாக்கடை மரணங்கள் தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை

மதுரை, நவ.7- மதுரை மாநகராட்சியின் கண் காணிப்பில் மெத்தனம் தொடர்வ தால் பாதாளச் சாக்கடை பணிகளில் சிக்கி உயிரிழப்பது தொடர்கிறது.  தமிழக அரசு உரிய தலையீடு செய்து எதிர்காலத்தில் இது போன்ற உயி ரிழப்புகளைத் தவிர்க்க வேண்டு மென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக கட்சியின் மதுரை புறநகர் மாவட்டச் செயலா ளர் கே.ராஜேந்திரன் திங்களன்று விடுத்துள்ள அறிக்கை: மதுரை மாநகராட்சியின் அலட்சியம், கண்டுகொள்ளாத போக்கால் பாதாளசாக்கடை அமைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஈரோடு மாவட்டம் சத்தியமங்க லத்தைச் சேர்ந்த ஆர்.சக்திவேல (36) உயிரிழந்தார். அன்னாரது குடும்பத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் ஆழ்ந்த  இரங்கலை தெரிவித்துக்கொள்கி றோம் சக்திவேல் உயிரிழப்பு அதிர்ச்சியையும் வேதனையையும்  ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த சக்திவேல் குடும்பத்திற்கு தமி ழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். சம்மந்தப்பட்ட காண்ட்ராக்ட் நிறுவனமும் அவரது  குடும்பத்திற்கு உரிய இழப்பீடு  வழங்கவேண்டும்.

அதே  நேரத்தில் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்ற மூன்றாவது சம்பவம் இது. இரண்டு சம்பவங்கள் மாநகராட்சி அதி காரிகளின் கண்காணிப்பு இல்லா ததால் தான் நிகழ்ந்துள்ளது. கூடல் நகரில் நடைபெற்ற மற்றொரு சம்ப வத்தில் வேலுகோபால் என்பவர் பாதாளச்சாக்கடைப் பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தார்.  இதற்குக் காரணம் தோண்டப்பட்ட குழிகளை முறையாக மூடாததுதான். ஏற்கனவே மதுரை விளாங்குடி யில் நிகழ்ந்த பாதாளச் சாக்கடை மரணத்தில் சேலத்தைச் சேர்ந்த தொழிலாளி உயிரிழந்தபோது மாநகராட்சி நிர்வாகம் கண்கா ணிப்பு உறுதிப்படுத்தப்படும் என  கூறியிருந்தது. இது தொடர்பாக ஒப்பந்ததாரர்களுக்கு சுற்றறிக்கை யும் அனுப்பப்பட்டது.  அந்தச் சுற்ற றிக்கை அமலாகவில்லை என்பதும் கண்காணிப்பு உறுதிப்படுத்தப் படும் என்ற உத்தரவாதமும் நடக்க வில்லை என்பதையே திங்களன்று கூடல்நகரில் நடைபெற்ற சம்பவம் காட்டுகிறது ஒரு பணிக்காக ஒரு சாலை யைத் தோண்டுவது மூடுவது, வேறொரு பணிக்காக அதே சாலையை தோண்டுவது, மூடுவது போன்ற நடவடிக்கைகள் மதுரை யில் தொடர்கிறது. இதனால் மாநக ராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்  கும் மக்கள் சொல்லொனா துய ரங்களைச் சந்திக்கின்றனர். எனவே அனைத்துப் பணிகளையும் ஒரே நேரத்தில் முடிக்க வேண்டும்.  இதன் மூலம் விபத்துகளையும் உயி ரிழப்புகளையும் தடுக்க முடியும். எதிர்வரும் காலங்களில் இது போன்ற உயிர்ப்பலிகள் நடை பெறாமல் தடுக்க வேண்டும். மாநக ராட்சி அதிகாரிகள் கண்காணிப்பில் தான் பணிகள் நடைபெறும் என் பதை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும்.