மதுரை, மே 3- மதுரை சித்திரை திருவிழா வின் தேரோட்டம் மே 3 புதனன்று நடைபெற்றது. இதில் லட்சக்க ணக்கானோர் பங்கேற்றனர். கீழ மாசி வீதியில் துவங்கிய தேரோட்டம், தெற்கு மாசி வதி, மேல மாசி வீதி, வடக்கு மாசி வீதி வழியாக வலம் வந்து மீண்டும் கீழ மாசி வீதியை வந்தடைந்தது. சித் திரை திருவிழாவின் 11 ஆவது நாளான மே -3 ஆம் தேதி நடை பெற்ற தேரோட்டத்துடன் மீனாட்சி அம்மன் கோவிலில் நடக்கும் சித்திரை திருவிழா நிறைவு பெற் றது. தேரோட்டத்தை காணவந்த மக்களுக்கு பல்வேறு அமைப்பு கள், நிறுவனங்கள் சார்பில் நீர் மோர் மற்றும் உணவுகள் வழங் கப்பட்டன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மதுரை மாநகர் மத்திய - 2 ஆம் பகுதிக்குழுவின் தோழர் பூச்சி நினைவு படிப்பகம் சார்பில் வடக்கு மாசி-மேலமாசி வீதி சந்திப்பில் தியாகி லீலாவதி நினைவு நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டு, தேரோட் டத்தை காணவந்த மக்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது. இந்நிக ழ்ச்சியை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மாவட்டச் செயலாளர் மா. கணே சன், துணை மேயர் டி. நாகராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அ. ரமேஷ், பகுதிக்குழு செயலாளர் பி. ஜீவா ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் மாவட்டக்குழு உறுப்பினர் பி. கோபிநாத், பகு திக்குழு உறுப்பினர்கள் ஜீவகலா, இ. உதயநாதன், கிளைச் செயலா ளர் சிங்காரம் ஆகியோர் கலந்து கொண்டனர். மதுரை சித்திரை திருவிழா தேரோட்டத்தில் மதுரை நாடாளு மன்ற உறுப்பினர் சு. வெங்கடே சன், மதுரை மாநகராட்சி துணை மேயர் டி. நாகராஜன் ஆகியோர் மக்களுடன் கலந்துகொண்டு நடந்து வந்தனர்.