பொங்கல் பண்டிகை திருநாளை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் நடைபெற இருக்கும் ஜல்லிக்கட்டு போட்டிக்காக அரசு இணையதளத்தில் 4544 காளைகள் போட்டியிடுவதற்காக உரிமையாளர்களால் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
மேலும் 2001 மாடு பிடி வீரர்கள் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்வதற்காக அரசு இணையதளத்தில் புதனன்று பதிவு செய்து உள்ளனர்.
மேற்படி பதிவு செய்துள்ள விபரங்கள் , சான்றுகள் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது என மதுரை மாவட்ட ஆட்சி தலைவர் மரு. எஸ். அனிஷ் சேகர், தெரிவித்து உள்ளார்.