மதுரை, டிச.7- மதுரை மாவட்ட மேலூர் வட்டம் தெற்கு தெரு, கருத்தபுளியம்பட்டி கிராமத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறையின் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் 84.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி கட்டிடங்களை சென்னை தலைமை செயல கத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் புதனன்று திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து மதுரை மாவட்டத் தில் வணிகவரி- பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி பயனாளிகளுக்கு குடியிருப்புக் கான ஆணைகளை வழங்கினார். தொடர்ந்து மதுரை மாவட்டம் மேலூர் ஊராட்சி ஒன்றியம் அலுவலக புதிய கட்டி டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி அமைச்சர் பி. மூர்த்தி தலைமையில் நடை பெற்றது, மாவட்ட ஆட்சியர் எஸ். அனிஸ் சேகர், சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ. வெங்க டேஸ், மு. பூமிநாதன் மற்றும் கூடுதல் ஆட்சி யர், மாவட்ட முகமை திட்ட அலுவலர் ,மாவட்ட ஊராட்சித் தலைவர் ஆகியோர் மேலூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகளை அமைச்சர் பி.மூர்த்தி துவக்கி வைத்தார்.