districts

மதுரை விரைவு செய்திகள்

மாவு இயந்திரத்தில் சிக்கி பெண் கை துண்டானது

திருவில்லிபுத்தூர், ஜூன் 9-  திருவில்லிபுத்தூர் அருகே  சின்ன அத்திகுளத்தை சேர்ந்தவர் சுப்பையா . இவ ரது மனைவி மலர்மதி (46) இவர் திருவில்லிபுத்தூர் ரயில்வே நிலையம் அருகே ஒரு மாவு அரைக்கும் ஆலை யில் தொழிலாளியாக பணி புரிந்து வந்தார். சம்பவத்தன்று மாலை மலர்மதி மாவு அரைக்கும் இயந்திரத்தின் கீழ் சிதறி கிடந்த கோதுமையை சுத்தம்  செய்யும்போது அவரது இடது கை மாவு அரைக்கும் இயந்திரத்தில் சிக்கி  துண் டானது. இதை தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலை யில் மதுரை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல் லப்பட்டார். விபத்து குறித்து மாவு மில்லின் மேலாளர் மதுரை திருநகரை சேர்ந்த பாலமுருகன் தந்த புகாரின்  பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


போடியில் தகராறு செய்து தாக்கிய  2 பேர் கைது

போடி, ஜூன் 9-      போடி தீயணைப்பு நிலைய தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் (52).வீட்டிற்கு செல்லும் வழியில் சிலர் மது போதையில் ரகளை செய்து கொண்டிருந்துள்ளனர். அவர்களை மாரியப்பன் கண்டித்துள்ளார். இதில் மேற்படி நபர்கள் மாரி யப்பனை மது பாட்டில்களா லும், கையாலும் தாக்கி காயப் படுத்தியுள்ளனர். அந்த வழியாக சென்ற கலிபுல்லா மகன் சபிபுல்லா (47) என்பவர் அவர்களை விலக்கி விட்டுள்ளார். மது போதை நபர்கள் மாரியப்ப னுக்கு கொலை மிரட்டல்  விடுத்துவிட்டு சென்றுவிட்ட னர். இதனிடையே சபிபுல்லா அப்பகுதியில் உள்ள தனி யார் மதுக்கூடம் வழியாக வீட் டிற்கு சென்றுள்ளார். தனி யார் மதுக்கூடம் அருகே நின் றிருந்த மதுபோதை நபர்கள்,  சபிபுல்லாவை வழிமறித்து அவரையும் தாக்கி காயப் படுத்தினர். இதுகுறித்து மாரியப்பன் மகன் நவீன் (30) கொடுத்த புகாரின் பேரில் போடி நகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து  போடி கிழக்கு தெருவை சேர்ந்த சங்கர், அஜீத்பாண்டி, பாசித் மற்றும்  ஒருவர் என்பது தெரிந்தது.  சங்கர் மற்றும் அஜீத்பாண்டி யை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மற்ற 2 பேரை தேடி வருகின்றனர்


கத்தியால் தாக்கியவர் கைது

போடி, ஜூன் 9-    போடியில் கட்டுமான தொழிலாளியை கத்தியால் தாக்கியவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனர். போடி கோட்டை கருப்ப சாமி கோவில் தெருவை சேர்ந்த  வர் முகமது அனிபா மகன் சேக்பரீத் (50). இவர் கட்டு மான வேலைக்கு சென்று வரு கிறார். இவரது வீட்டருகே நின்று போடி புதூரை சேர்ந்த நாகூர் மீரான் மகன் அக்கீம் (22) என்பவர் ரகளை செய்து கொண்டிருந்துள்ளார். அவரை கண்டித்தபோது அக்  கிம் கத்தியால் சேக்பரீத்தை தாக்கி கொலை மிரட்டல்  விடுத்துள்ளார். இதில் சேக் பரீத் பலத்த காயமடைந்தார். இதுகுறித்து சேக்பரீத் கொடுத்த புகாரின் பேரில்  போடி நகர் காவல்துறையி னர் வழக்கு பதிவு செய்து அக்  கிமை கைது செய்து விசா ரித்து வருகின்றனர்.


எந்த அளவின் அடிப்படையில் மணல் விற்பனை  உயர்நீதிமன்றம் கேள்வி

மதுரை, ஜூன் 9-   திருச்சியைச் சேர்ந்த ராஜேந்திரன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில்,  “தமிழக அரசு தற்போது நேரடியாக மணலை விற்பனை  செய்கிறது. தமிழக அரசின் அரசாணையின் அடிப்படை யில் யூனிட் அளவில் மணல் விற்பனை நடைபெற்று வரு கிறது. ஆனால் இது தர நிர்ணயம் செய்யப்பட்ட அளவீடு அல்ல. இவ்வாறு முறையாக அளவிடு செய்யப்படாமல் விற்பனை செய்யப்படுவதால், அரசுக்கு அதிக அளவில் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. முறைகேடுகளும் நிகழ கார ணமாகின்றன. ஆகவே இதனை முறைப்படுத்த கோரி அதி காரிகளுக்கு பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவ டிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மணலை விற் பனை செய்ய தரநிர்ணய அளவீட்டை உருவாக்கி, அதன் அடிப்படையில் மணல் விற்பனையை செய்ய உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார். இந்த வழக்கை புதனன்று விசாரித்த நீதிபதிகள் பி.என். பிரகாஷ், ஆனந்தி அமர்வு, மணல் எந்த அளவின் அடிப்ப டையில் விற்பனை செய்யப்படுகிறது? தர நிர்ணயம் செய்யப்பட்ட அளவீடுகள் பயன்படுத்தப்படுகிறதா? என  கேள்வி எழுப்பினர். இதுகுறித்து அரசு தரப்பில் உரிய தக வல் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை யை ஒத்திவைத்தனர்.


75 ஆவது சுதந்திர தினம்  தேனியில் 53 பயனாளிகளுக்கு கடன் உதவி

தேனி, ஜூன் 9- 75-வது ஆண்டு சுதந்திர  திருநாள் அமுத பெருவிழா வினை முன்னிட்டு அனைத்து வங்கிகளின் சார்பில் கடன்  உதவிகள் வழங்கும் விழா வில் மாவட்ட ஆட்சியர் க.வீ. முரளீதரன் 53 பயனாளி களுக்கு ரூ.7.30 கோடி மதிப்பி லான கடனுதவிகளை வழங்  கினார். தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்டத்  தில் உள்ள அனைத்து வங்கி களையும் ஒருங்கிணைத்து நடைபெற்ற கடனுதவிகள் வழங்கும் விழாவின் மூலம் வேளாண் சார்ந்த தொழில் களுக்கு 13 பயனாளிகளுக்கு  ரூ.1.86 கோடி மதிப்பிலான கட னுதவிகளையும், பல்வேறு தொழில்கள் தொடங்கிட 21 பயனாளிகளுக்கு ரூ.3.90  கோடி மதிப்பிலான கடனு தவிகளையும், தனிநபர் கட னுதவியாக 19 பயனாளி களுக்கு ரூ.1.54 கோடி கடனு தவிகளையும் என மொத்தம் 53 பயனாளிகளுக்கு ரூ7.30  கோடி மதிப்பிலான கடனு தவிகளையும் மாவட்ட ஆட்சி யர் வழங்கினார். இவ்விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் தி.சுப்பி ரமணியன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் இராமசுப்பிரமணியன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் மோகன்குமார், கனரா வங்கி உதவி பொது மேலாளர் தாமோதரன் உட்  பட பலர் கலந்து கொண்ட னர்.