districts

மதுரை விரைவு செய்திகள்

விவசாயிகள் சங்கத்தில் இணைந்த 400 பேர்

சிவகங்கை, பிப்.13- மறவமங்கலம், பனிக்கனேந்தல், விளங்காட்டூர், பலூர், காஞ்சிரம் ஆகிய ஊர்களில் தமிழ்நாடு விவசாயி கள் சங்க உறுப்பினர் சேர்ப்பு நடந்தது 400 பேர் உறுப்பி னர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். உறுப்பினர் சேர்ப்பில் காளையார்கோவில் ஒன்றியச் செயலாளர் சாத்தப்பன், சாத்தப்பன் சங்கர், முருகேசன், போதகர், மாவட்டத் தலை வர் வீரபாண்டி, ஒன்றியத் தலைவர் பரமாத்மா, ஆண்டி  ஆகியோர் கலந்துகொண்டனர்.


3.5 டன் ரேசன் அரிசி பறிமுதல்

சிவகாசி, பிப்.13- சிவகாசிப் பகுதியில் ரேசன் அரிசி கடத்தப்படுவ தாகக் குடிமைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்  துறைக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல்  ஆய்வாளர் ஆல்வின் பிரிட்கட்மேரி, சார்பு ஆய்வாளர்  பொன்குணசேகரன் தலைமையிலான காவல்துறையினர் பி.எஸ்.ஆர். சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே வந்த சரக்கு வாகனத்தை நிறுத்திச் சோதனையிட்டனர். அதில், 69 மூடைகளில் தலா 50 கிலோ எடையுள்ள ரேசன் அரிசி இருப்பது தெரிய வந்தது. இதன் மொத்த மதிப்பு 3450 கிலோ ஆகும். இது  குறித்து வாகன ஓட்டுநரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தைச் சேர்ந்த அரிசி ஆலை உரிமையாளர்களான சுபாஷ், கண்ணன் ஆகியோ ரின் ஆலைகளுக்கு ரேசன் அரிசி கொண்டு செல்லப்படு வது தெரியவந்தது. இதையடுத்து, ஒட்டுநர் சிவசுப்பிரமணியன் (33), கார்த்திக்(22), மருதையா(25), நித்யகுமார் ஆகியோர் மீது  வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் ரேசன் அரிசி யைப் பறிமுதல் செய்தனர்.


உணவகத்தில் தீ விபத்து

கடமலைக்குண்டு, பிப்.13- கடமலைக்குண்டு கிராமத்தில் கரிகாலன் என்பவ ருக்குச் சொந்தமான உணவகம் உள்ளது. திங்கள்கிழமை பகல் இரண்டு மணியளவில் மூடப்பட்டது. அடுப்பில் தீயை முழுமையாக அணைக்காமல் உணவகத்தை மூடிவிட்டுச் சென்ற நிலையில் பகல் மூன்று மணியளவில் உணவ கத்தின் உட்புறத்தில் தீ பிடித்தது. தீயணைப்பு மீட்புத்துறை யினர் மூன்று மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். 


தற்கொலை

கடமலைக்குண்டு, பிப்.13- கடமலைக்குண்டு அருகே மேலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன் (36). மனைவி பால்மணி. இவர் களுக்குப் பிரவீன்குமார், கிருஷ்ணகுமார் ஆகிய இரண்டு  மகன்கள் உள்ளனர். ஆனந்தன் கடந்த சில மாதங்க ளாகக் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதாகக் கூறப்படு கிறது. இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு  ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் திங்கள்கிழமை காலை வீட்டில் யாரும் இல்லாத போது ஆனந்தன் தூக்  கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 


அறிவியல் இயக்கக் கூட்டம்

பழனி, பிப்.13- திண்டுக்கல் மாவட்டம் பழனி சுவாமி மழலையர் பள்ளி யில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் பழனி கிளைக்  கூட்டம் பேரா. மீனா சுந்தர் தலைமையில் நடைபெற்றது. மாவட்டத்தலைவர் சுப.ராசு, துணைத்தலைவர் முத்து மாணிக்கம் பேரா.மோகனா ஆகியோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் பிப். 12- சார்லஸ் டார்வின் பிறந்தநாள்,  பிப்.15 கலீலியோ பிறந்த நாள், பிப்.28 தேசிய அறிவியல்  தினம் மூன்றையும் சிறப்பாகக் கொண்டாட முடிவு செய்  யப்பட்டது. அன்புபிரகாஷ் நன்றி கூறினார்.


பேருந்து சக்கரத்தில் சிக்கி பலி

நத்தம்,பிப்.13- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கோபால் பட்டி-பாறைப்பட்டியைச் சேர்ந்தவர் காட்டுவா. இவரது மனைவி பிச்சையம்மாள் (58). இவர் மதுரைக்குச் சென்று விட்டு மீண்டும் ஊருக்கு செல்வதற்காக நத்தம் பேருந்து  நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்து பாறைப்பட்டி செல்லும் பேருந்தில் ஏற முயன்ற போது பின்னால் வந்த  அரசு நகர் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். நத்தம் காவல்துறையினர் விசாரித்தனர்.


பாலியல் தொல்லை; 20 ஆண்டு சிறை

திருவில்லிபுத்தூர், பிப்.13- அருப்புக்கோட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசிப்பவர் செல்லப்பாண்டி (26). இவர் கடந்த 13.6.2022  அன்று 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்துள் ளார். இது தொடர்பான வழக்கு திருவில்லிபுத்தூர் சிறார் பாலியல் குற்றத்தடுப்பு அமர்வு சிறப்பு நீதிமன்றத்தில் நடை பெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி கே.பூரணஜெய ஆனந்த் செல்லப்பாண்டிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்ட னையும் ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்துத் தீர்ப்ப ளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூபாய் 10 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டார்.


அதிகளவு அசைவம் சாப்பிட்டவர் நெஞ்சு எரிச்சலால் உயிரிழப்பு

சின்னாளபட்டி, பிப்.13- திண்டுக்கல் அருகில் உள்ள கலிக்கம்பட்டியை சேர்ந்த வர் வசந்தகுமார் (22). கூலி வேலை பார்த்து வருகிறார். வசந்தகுமார் ஞாயிறு மதியம் வீட்டில் சமைத்த சிக்கன்  உணவை அதிகளவு சாப்பிட்டுள்ளார். பின்னர் மாலை யில் பொறித்த மீன்களை சாப்பிட்டுள்ளார். அதன்பிறகு  அவருக்கு நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டு மூச்சு விட முடி யாத நிலை ஏற்பட்டது. இது குறித்து தனது தந்தையிடம் வசந்தகுமார் கூறி உள்ளார். ஜீரணத்துக்காக குளிர் பானம் குடித்த நிலையில் சிறிது தூரம் நடந்து செல்வதாக வீட்டில் கூறிச் சென்றார். அதன்பிறகு ஊருக்கு வெளியே மயங்கிய நிலையில் வசந்தகுமார் கிடந்துள்ளார். இதை யடுத்து அவரது பெற்றோர் போன் செய்து வரவழைத்த னர். அவரை பரிசோதித்த ஊழியர்கள் அவர் இறந்து விட்ட தாக தெரிவித்தனர். சிக்கன் மற்றும் மீன் உணவுகளை அதிக அளவு சாப்பிட்டதால் நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டு  அவர் இறந்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரி வித்துள்ளனர். 


உசிலம்பட்டி வட்டாட்சியர் மாற்றம்

மதுரை, பிப். 13-  மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டாட்சியராக இருந்த கருப்பையா மதுரை விமான நிலைய விரி வாக்கப்பிரிவு வட்டாட்சியராக மாற்றப்பட்டார். இப் பணியி லிருந்த ஏ.சுரேஷ் பிரடெரிக் கிளமென்ட் உசிலம்பட்டி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஆட்சி யர் அனீஷ்சேகர் பிறப்பித்துள்ளார்.


பட்ஜெட் கூட்டத்தொடரில் முற்றுகை  அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் தகவல்

சிவகங்கை, பிப்.13- தமிழக அரசு, அரசு ஊழி யர்களின் நிறைவேற்ற வலி யுறுத்தி மார்ச் மாதம் வேலை நிறுத்தம், பட்ஜெட் தொட ரின்போது (ஏப்ரல்) சென்னை யில் முற்றுகைப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு ஊழியர்  சங்க மாநில பொதுச்செயலா ளர் செல்வம் சிவகங்கையில் தெரிவித்தார். சிவகங்கையில் நடை பெற்ற மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் கூட் டத்தில் பங்கேற்க வந்திருந்த அவர் இந்தத் தகவலைத் தெரிவித்தார். கூட்டத்தில் மாவட்டத் தலைவர் கண்ண தாசன் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் ஞானத்  தம்பி உள்ளிட்ட பல்வேறு  தோழமைச் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


அபிராமம் சந்தையைக் குத்தகைக்கு விட எதிர்ப்பு

இராமநாதபுரம், பிப்.12- அபிராமம் பேரூராட்சியில் உள்ள சந்தையில் வியாபா ரம் செய்பவர்களிடம் பேரூராட்சி நிர்வாகமே வாடகை வசூல்  செய்ய வேண்டும். சாலையோர வியாபாரிகளுக்கு அடை யாள அட்டை வழங்க வேண்டும் என வலியுறுத்தி பேரூராட்சி  செயல் அலுவலரிடம் முறைசாரா தொழிலாளர் சங்க மாவட்டச்  செயலாளர் இரா.முத்துவிஜயன், சந்தை வியாபாரிகள் சங்கப்  பொருளாளர் ஏ.ஆலடிஸ்வரன் உட்பட நூறு பேர் மனு அளித்தனர்.