ஏடிஎம்-இல் பணம் எடுத்து தருவது போல் ரூ.41 ஆயிரம் மோசடி
விருதுநகர், பிப்.20- விருதுநகரில் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க உதவி செய்வது போல் ஏமாற்றி ரூ.41 ஆயிரம் மோசடி செய்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். விருதுநகர் அனுமான் நகரைச் சேர்ந்தவர் செல்லம் மாள் (38). இவர் தெப்பம் அருகே உள்ள தனியார் ஏடிஎம்மிற்கு பணம் எடுக்க சென்றுள்ளார். அங்கு 35வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அவருக்கு உதவி செய்ய முன் வந்துள்ளார். ஏடிஎம் அட்டையின் ரகசிய எண்ணை செல்லம்மாள் கூறியுள்ளார். இதையடுத்து, அந்த பெண் ரூ.1500 எடுத்து செல்லம்மாளிடம் கொடுத்துள்ளார். அப் போது, அட்டையை வாங்க செல்லம்மாள் மறந்து விட்டா ராம். பின்பு, செல்போனுக்கு ரூ.2500 எடுத்ததாக குறுஞ் செய்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வங்கிக்கு சென்று விபரம் கேட்டுள்ளார். அப்போது வங்கி ஊழியர்கள், உங்களது கணக்கில் இருந்து ரூ.41 ஆயிரம் எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித் தார்களாம். இதனால், அதிர்ச்சியடைந்த செல்லம்மாள், விருதுநகர் பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவில் திருவிழாவில் தகராறு: வாலிபர் கொலை
மதுரை, பிப்.20- மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருமாத்தூ ரில் பொன்னாங்கன் கோவிலில் மாசி சிவராத்திரி திருவிழா நடைபெற்றது. இந்த கோவிலில் கூட்ட நெரிசலில் தக ராறு செய்ததாக இரு தரப்பு இளைஞர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் கருமாத்தூர் , தவசித்தேவன் காலனியைச் சேர்ந்த நீதி என்ற வாலிபர் கடுமையாக தாக்கப்பட்டு படுகாயமடைந்தார். அவரை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். செக்காணூரணி காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். நீதியை தாக்கிய நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருமங்கலம் சார் பதிவாளர் அலுவலகம் முன்பு கோஷ்டி மோதல்
மதுரை, பிப்.20- மதுரை மாவட்டம் திருமங்கலம் சார் பதிவாளர் அலு வலக வாயில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு இடைத்தர கர் இரு கோஷடியினரிடையே தகராறு ஏற்பட்டது. இதில் கம்பியால் தாக்கியதில், மூன்று பேர் காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் அந்த வீடியோ காட்சி வைரலாகி வந்ததை தொடர்ந்து, இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்த சம்பவம் குறித்து திருமங்கலம் நகர் காவல்துறையினர் திருமங்கலம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த சுந்தரபாண்டி(40), சுந்தர்ராஜ்(35), கார்த்திக் (29)ஆகிய மூவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சீமானுக்கு எதிர்ப்பு தெரிவித்து தேனியில் ஆர்ப்பாட்டம்
தேனி, பிப்.20- அருந்ததியர் சமுதாய மக்களை அவதூறாக பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நட வடிக்கை எடுக்கக் கோரி தேனியில் பெரியாரிய உணர்வா ளர்கள் கூட்டமைப்பு மற்றும் ஆதித்தமிழர் பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேனி ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு ஆதித்தமிழர் மாவட்ட செயலாளர் வீ.பெ. சுரேஷ் தலைமை வகித்தார் .மேற்கு மாவட்ட செயலா ளர் அதியர் மணி முன்னிலை வகித்தார் .திராவிடர் கழக மாவட்ட செயலாளர் பூ.மணிகண்டன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழ் புலிகள் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .
சிறைக்காவலர்களை தாக்கிவிட்டு தற்கொலை மிரட்டல் விடுத்த கைதி
மதுரை, பிப்.20- மதுரை மத்திய சிறைச்சாலையில் விசாரணை கைதி யாக மகேஷ் சண்முகம் என்பவர் உள்ளார், இவர் சனிக்கிழ மையன்று சக கைதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவரை காவலர்கள் சமரசம் செய்து அறைக்குள் செல்லு மாறு கூறினர். இதை ஏற்க மறுத்த கைதி மகேஷ், காவ லர்கள் கண்ணன், பாண்டியன் ஆகியோருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதோடு இருவரையும் தாக்கியுள்ளார். இதுகுறித்து விசாரணை நடந்து வரும் நிலையில், ஞாயிறன்று முடிவெட்டும் கத்திரிக்கோலை தனது கழுத்தில் வைத்து தற்கொலை செய்து கொள்ளப் போவ தாக மகேஷ் சண்முகம் மிரட்டல் விடுத்தார். சிறைக்காவ லர்கள் துரிதமாக செயல்பட்டு கத்திரிக்கோலை பறிமுதல் செய்தனர். இதனைத்தொடர்ந்து விசாரணைக்கைதி மகேஷ் சண்முகம் மீது சிறை அலுவலர் பாலகிருஷ்ணன் கரிமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.