districts

மதுரை விரைவு செய்திகள்

சிறுமலையில்  நிலத்தகராறில் துப்பாக்கிச்சூடு  

திண்டுக்கல், மார்ச் 2- திண்டுக்கல் சிறுமலையில் அகஸ்தியர்புரம் பகுதி யில் காரைக்குடியைச் சேர்ந்த தனபால் என்பவருக்கு சொந்தமாக நிலம் உள்ளது. அகஸ்தியர்புரத்தைச் சேர்ந்த  ராஜாகண்ணு மற்றும் சித்தரேவு நெல்லூர் பகுதியைச் சேர்ந்த கருப்பையா ஆகியோர் நில புரோக்கர்களாக உள்  ளனர். இருவரும்  4 ஆண்டுகளுக்கு முன்பு தனபாலின் 5 ஏக்கர் நிலத்தில் நான்கரை ஏக்கர் நிலத்தை விற்றதாக தக ராறு நிலவி வந்தது. அரை ஏக்கர் நிலத்திற்கான பணத்தை  பெறுவதற்காக தனபாலின் தோட்டத்தில் உள்ள வீட்டுக்கு  கருப்பையா, ராஜாகண்ணு ஆகியோர் சென்று வந்துள்ள னர். வியாழனன்று செல்லும் போது நடைபெற்ற பேச்சு வார்த்தையில் பிரச்சனை ஏற்பட்டு, தனபால் தன் வீட்டிலி ருந்த துப்பாக்கியை எடுத்து வந்து கருப்பையாவை சுட்டுள்ளார். ராஜாக்கண்ணுவை சுடும் போது அருகில்  இருந்தவர்கள் தடுத்துவிட்டனர். இதில் ராஜாகண்ணுக்கு  கையில் காயம் ஏற்பட்டுள்ளது. கருப்பையாவுக்கு இடுப்  புக்கு கீழே குண்டடி பட்டுள்ளது. இதனால் உயிருக்கு  போராடிய இருவரும் திண்டுக்கல் அரசு மரத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். (நநி)


தேனியில் நாளை தனியார்  வேலைவாய்ப்பு முகாம்

 தேனி, மார்ச் 2- தேனியில் 150 தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்  ளும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை கம்ம வார் சங்க கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது. தேனி மாவட்ட நிர்வாகம்,  மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்ககம் (மகளிர் திட்டம்) இணைந்து தேனி  கம்மவார் சங்கம்  கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வரும்  சனிக்கிழமை அன்று 8 மணி முதல் பிற்பகல் 3  மணி வரை மாபெரும்  தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இம்முகாமில்  தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 150-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலைநாடுனர்களை தேர்வு செய்யவுள்ளனர்.  பல திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு திறன் பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்புக்கு மனுதாரர்களை தேர்வு செய்யவுள்ளனர்.  இம்முகாமில் கலந்துகொள்ள கல்வித் தகுதி 8-ம் வகுப்பு முதல் பட்டப்  படிப்பு வரை மற்றும் பி.இ, டிப்ளமோ, ஐ.டி.ஐ, நர்சிங்,  பார்மசி, டெய்லரிங், டிரைவர் மற்றும் இதர கல்வித் தகுதி களுடைய அனைவரும் பங்கேற்கலாம். மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடை பெறவுள்ளதையொட்டி ஆட்டோ பிரச்சாரத்தினை மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா, கொடியசைத்து துவக்கி வைத்தார்.


இளம்பெண் தற்கொலை

ஒட்டன்சத்திரம், மார்ச் 2-  திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கொ.கீரனூரைச் சேர்ந்தவர் வேன் ஓட்டுநர் பால கிருஷ்ணன். இவருக்கு அஞ்சலிதேவி (32) என்ற மனைவி யும் 2 குழந்தைகளும் உள்ளனர். பாலகிருஷ்ணனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து  வந்துள்ளது. இதேபோல் சம்பவத்தன்று வழக்கம்போல பாலகிருஷ்ணன் போதையில் வந்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு தகராறு ஏற்பற்பட்டது. இந்நிலையில், புதனன்று அஞ்சலிதேவி வீட்டில் தனி யாக இருந்தபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.