கோலாகலமாக நடந்த ஈஸ்டர் கொண்டாட்டங்கள்
நாகர்கோவில், ஏப்.17- கன்னியாகுமரி மாவட்டத்தில் ஈஸ்டர் பண்டிகை சிறப்பு பிரார்த்தனை களுடன் கோலாகலமாக கொண்டா டப்பட்டது. கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழும் மாவட்டங்களில் ஒன்றான கன்னியா குமரி மாவட்டத்தில் ஈஸ்டர் பண்டிகை யையொட்டி அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் நள்ளிரவில் சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது. நாகர்கோவில் கோட்டார் புனித சவேரி யார் ஆலயத்தில் ஆயர் நசரேன் சூசை தலைமையில் நடைபெற்ற பிரார்த்தனை யில் ஏராளமான மக்கள் கலந்து கொண்ட னர். இரவு நடந்த சிறப்புப் பிரார்த்தனை நள்ளிரவு வரை நீடித்தது. நள்ளிர வில் இயேசு உயிர்த்தெழுந்த காட்சி தத்ரூபமாக நடத்திக் காண்பிக்கப்பட்டது. கொரோனாவால் கடந்த இரண்டு ஆண்டு களாக உற்சாகமின்றி நடந்த ஈஸ்டர் பண்டிகை இந்த ஆண்டு கட்டுப்பாடு கள் தளர்வு காரணமாக உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
கன்னியாகுமரியில் பரவலாக மழை
நாகர்கோவில் ஏப். 17 கன்னியாகுமரி மாவட்டம் முழுவ தும் கடந்த இரு வாரங்களாக பரவலாக பெய்து வரும் மழையின் காரணமாக வெப்பம் தணிந்தால் மக்கள் மகிழ்ச்சிய டைந்தனர். கடந்த இரண்டு நாட்களாக மழை சற்று குறைந்திருந்த நிலையில் சனிக் கிழமை இரவு அணைப் பகுதிகளில் மழை மீண்டும் பெய்தது. பேச்சிப் பாறை, பெருஞ்சாணி அணைப் பகுதி யில் விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. மலையோரப் பகுதி யான பாலமோர் பகுதியில் கனமழை கொட்டித் தீர்த்தது. அங்கு அதிகபட்ச மாக 21. 2 மில்லி மீட்டர் மழை பதிவாகி யுள்ளது. மலையோரப் பகுதிகளிலும் அணை யின் நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வ ரும் மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பேச்சிப் பாறை பெருஞ்சாணி அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. திற்பரப்பு அருவி பகுதியில் பெய்து வரும் சாரல் மழை காரணமாக அங்கு வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவுகிறது. அருவியில் குளிப்பதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணி கள் வந்து குவிந்திருந்த வண்ணம் உள்ள னர். ஞாயிறு காலை ஆரல்வாய்மொழி, தக்கலை, சுங்கான்கடை பகுதிகளிலும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப் பகுதிகளிலும் மழை தொடர்ந்தது. பேச்சிப் பாறை அணையில் இருந்து பாசனத்திற் காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மகளை கடத்திய பெற்றோர் போலீஸ் எஸ்பிடம் கணவர் புகார்
திண்டுக்கல், ஏப்.17- திண்டுக்கல் அருகே காதல் திரு மணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பெற் றோர் மகளை பிரித்து கடத்திச்சென்றனர். காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரி வித்து தன்னையும் தனது சகோதரனை யும் கடுமையாக தாக்கிவிட்டு கடத்திச் சென்ற பெற்றோர்களிடமிருந்து மனைவி யை மீட்டுத்தர வேண்டும் என்று மாவட் டக் காவல்துறைக் கண்காணிப்பாளரிடம் கணவர் புகார் கொடுது;துள்ளார்.. அது பற்றிய விவரம் வருமாறு: வடமதுரை அருகில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வருபவர் பர ணிக்குமார் (23). இதே மில்லில் வேலை பார்த்த புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகா மேட்டுக்காட்டுப்பட்டி யைச் சேர்ந்த கவிதா என்பவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில் 11.4.2022 அன்று இரு வரும் திருமலைக்கேணி முருகன் கோவி லில் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் இருவருக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதால் பாதுகாப்பு வழங்கக்கோரி வடமதுரை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கவிதா பெயரில் புகார் கொடுத்துள்ள னர். இதனையடுத்து இரண்டு குடும்பத் தினரையும் போலீசார் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி சமாதானப்படுத்தி னர். ஆனாலும் பெண் வீட்டார் சமாதா னமடையாமல் பேச்சுவார்த்தையை முறித்துக்கொண்டனர். இந்நிலையில் பரணிக்குமாரையும் அவரது சகோதரர் ஜெயராமையும் தாக்கி விட்டு கவிதாவை பெற்றோர் கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. இது தொடர் பாக பரணிக்குமாரின் புகாரை வடமதுரை காவல்நிலைய அதிகாரிகள் ஏற்க மறுத்த தாக கூறப்படுகிறது. பின்னர் பரணிக் குமார் மாவட்டக்காவல்த்துறைக் கண்கா ணிப்பாளரிடம் புகார் கொடுத்துள்ளார்.
பாலக்காடு மாவட்டத்தில் 144 தடை உத்தரவு தொடர் கொலைகளை தடுக்க நடவடிக்கை
பாலக்காடு, ஏப்.17- பாப்புலர் ஃப்ரண்ட் மற்றும் ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்கள் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பாலக்காடு மாவட்டத் தில் ஏப்ரல் 20ஆம் தேதி மாலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மதக்கலவரம் ஏற்படவும், அதைத் தொடர்ந்து சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு ஏற்பட வும் வாய்ப்புள்ளதை கருத்தில் கொண்டு கூடுதல் மாவட்ட ஆட்சி யர் கே.மணிகண்டன் இந்த உத்தர வைப் பிறப்பித்துள்ளார். பொது இடங்களில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதை இது தடை செய்கிறது. பொது இடங்களில் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் அல்லது ஊர்வலங்கள் நடத்த அனுமதி இல்லை. பொது இடங்களில் தனி நபர்கள் ஆயுதங்களை எடுத்துச் செல்வது தடை செய்யப்படுகிறது. இந்திய வெடிபொருள் சட்டம், 1884, பிரிவு 4ன் கீழ், பொது இடங்களில் வெடிபொருட்களை வைத்திருப்பது கூடாது. எதிர்பா ராத சம்பவங்களுக்கு வழிவகுக் கும் வகையில் சமூகத்தில் வதந்தி களை பரப்ப அனுமதிக்க முடியாது, என்று உத்தரவில் கூறப்பட்டு உள்ளது. அத்தியாவசிய சேவை கள் மற்றும் சட்ட அமலாக்க நிறு வனங்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
விபத்தில் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகி சதீஷ் குமாருக்கு நிதி உதவி
நாகர்கோவில், ஏப்.17- கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட சாலை விபத்தில் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக் கான சங்கத்தின் கன்னியாகுமரி மாவட்ட இணைச் செயலாளர் சதீஷ் குமாருக்கு கால் முறிவு ஏற்பட்டது. இவர் பணியாற்றி வந்த அரசு உதவி பெறும் கல்லூரியால் பழிவாங்கப்பட்டு போதிய வருவாய் இல்லாமல் இவரது குடும்பம் சிரமத்தை சந்தித்து வருகிறது. மாற்றுத் திறனாளியான மனைவியும் இதற்கு முன்பு விபத்தில் கால் அறுவை சிகிச்சை செய்து கொண்டு சிகிச்சையில் உள்ளார். இரண்டு குழந்தைகளின் கல்விச் செலவு உட்பட பெரும் பொருளா தார சுமையாலும் இந்தக் குடும்பம் துயரங்களை அனு பவித்து வருகிறது. இந்நிலையில் சங்கத்தின் மாவட்டக்குழு சார்பில் சதீஷ் குமாரிடம் ரூ.25,000 விபத்து நிவாரண நிதியாக வழங்கப்பட் டது. மாவட்டத் தலைவர் சார்லஸ், செயலாளர் மனோகர ஜஸ்டஸ், துணைத்தலைவர்கள் ராமச்சந்திரன், தங்கக்குமார் மற்றும் சதீஷ் குமாரின் மனைவி ஆகியோர் உடனிருந்தனர்.
மின்வாரிய சட்டத்திருத்த மசோதா தலைமேல் கத்தி: எளமரம் கரீம்
திருவனந்தபுரம், ஏப்.17- மின் துறையை தனியாருக்கு தாரை வார்க்க மத்திய அரசு எந்த நேரத்திலும் மின் சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்றத் தில் நிறைவேற்றலாம் என சிஐடியு மாநில பொதுச்செயலாளர் எளமரம் கரீம் கூறினார். இந்த மசோதா மின்வாரிய ஊழியர்களின் தலைக்குமேல் தொங்கும் கத்தி என்றும் அவர் குறிப்பிட்டார். கேஎஸ்இபி வாக்கெடுப்பு தொடர்பாக தொழிலாளர் சங்கம் (சிஐடியு) ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது: விவசாயிகள் போராட்டத்தின் ஒரு பகுதியாக போராட்டக்குழு மற்றும் இடதுசாரிகள் கொடுத்த அழுத்தம் காரண மாக கடந்த கூட்டத்தொடரில் மின்சார மசோதா நாடாளுமன்றத்துக்கு வரவில்லை. ஆனால், இதில் இருந்து அரசு பின்வாங்கியதாகக் கூற முடியாது. இந்த மசோதா நிறைவேற்றப் பட்டால், பல நிறுவனங்கள் சந்திக்கும் பிரச்னைகள் மின் துறையில் ஏற்படும். கேரள மின்சார வாரிய ஊழியர்கள் தியாக பூர்வமாக வேலை செய்பவர்கள். ஆனால், தொழிலாளர்களின் பிரச்சனைகளை பலர் கண்டுகொள்வதில்லை. கேஎஸ்இபியில் உள்ள பிரச்னைகள் குறித்து அமைச்சரிடம் பேசியுள்ளேன். தாம் தலையிட்டு தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்துள்ளார். சர்ச்சைகள் இயற் கையானது. அதை சரி செய்துவிட்டு செல்லுங் கள். சில ஊடகச் செய்திகளின்படி, கேஎஸ்இபி க்கு எதிராக சிஐடியு போராட்டம் நடத்துகிறது என சில ஊடகங்கள் கூறு கின்றன. சில ஊடகங்கள் சிஐடியுவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கின்றன. ஊட கங்கள் ஏன் தொழிலாளர் விரோத நிலைப் பாட்டை எடுக்கின்றன என்பது புரியவில்லை என்றார்.
நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
அரியலூர், ஏப்.17 - தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் - அரியலூர் கோட்டம் சார்பாக ஏப்ரல் 19 (செவ்வாய்க் கிழமை) காலை 11 மணியள வில் “மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” பெரம்பலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறி யாளர் தலைமையில், அரிய லூர் ராஜாஜி நகர் - காலேஜ் சாலையில் அமைந்துள்ள செயற்பொறியாளர் அலு வலகத்தில் நடத்தப்பட உள்ளது. எனவே இக்கோட்ட மின் நுகர்வோர்கள், விவசா யிகள் மற்றும் விவசாய பிரதி நிதிகள் தங்களது குறைகளை மனுக்கள் மூலம் மேற் பார்வை பொறியாளரிடம் தெரிவித்து பயன் அடைந்திட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் கூட்டத்தில் கலந்து கொள்ப வர்கள் அனைவரும் அரசு அறிவித்துள்ள வழிகாட்டுத லின்படி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்று மாறு மாவட்ட ஆட்சியர் பெ. ரமண சரஸ்வதி தெரிவித்துள் ளார்.
அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை
மயிலாடுதுறை, ஏப்.17 - மயிலாடுதுறை மாவட் டம் தரங்கம்பாடி வட்டம் மேலப் பெரும்பள்ளம் கிராமத்தில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் உருவச் சிலைக்கு நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், பூம்புகார் தொகுதி சட்ட மன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஒன்றிய செயலாளர்கள் எம்.அப்துல் மாலிக், பி.எம்.அன்பழகன், நாகை வடக்கு மாவட்ட திமுக துணை செயலாளர் மு.ஞானவேலன், மாவட்ட பொருளாளர் ஜி.என்.ரவி, மாவட்ட தகவல் தொழில் நுட்ப நுட்ப அணி அமைப்பா ளர் பி.எம்.ஸ்ரீதர், மேலப்பெ ரும்பள்ளம் ஊராட்சி மன்ற தலைவர் தேவி சுரேஷ்குமார் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய குழு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
சிபிஎம் பெண் உறுப்பினர்களுக்கு பயிற்சி வகுப்பு
புதுக்கோட்டை, ஏப்.17 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டக்குழு சார்பில் பெண் கட்சி உறுப்பினர்களுக் கான பயிற்சி வகுப்பு ஞாயிற் றுக்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை கட்சி அலுவலகத்தில் நடை பெற்ற பயிற்சி வகுப்பிற்கு மாவட்டக்குழு உறுப்பினர் பி.சுசீலா தலைமை வகித் தார். வகுப்பைத் தொடங்கி வைத்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில செயலாளர் கே.தமிழ் செல்வி உரையாற்றினார். அறிக்கையை முன்வைத்து மாவட்டக்குழு உறுப்பினர் டி.சலோமி பேசினார். பெண் விடுதலைப் போராட்டத்தில் ‘மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி’ என்ற தலைப்பில் கட்சியின் மாவட்டச் செயலா ளர் எஸ்.கவிவர்மன், ‘விடு தலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு’ என்ற தலைப்பில் மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னதுரை எம்எல்ஏ ஆகியோர் பேசி னர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ஸ்ரீதர், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.பாண்டிச்செல்வி நிறை வுரையாற்றினர். பயிற்சி வகுப்பில் மாவட்டம் முழுவ தும் இருந்து 200-க்கும் மேற்பட்ட பெண் உறுப்பினர் கள் பங்கேற்றனர்.
விவசாயிகள் பயிற்சி
பாபநாசம், ஏப்.17 - தேசிய நீடித்த வேளாண் இயக்கத்தின் சார்பில் விவசாயிகள் பயிற்சி மெலட் டூர் அருகே களஞ்சேரி யில் நடந்தது. இதில் அம்மாபேட்டை வேளாண்மை உதவி இயக்குனர் சுஜாதா பேசுகையில், வேளாண்மை துறையின் மூலம் வழங்கப்ப டும் திரவ உயிர் உரங்கள், நுண்ணூட்ட உரங்கள், பசுந்தாள் உர விதைகள் ஆகியவற்றை பயன்படுத்தும் போது மண் வளம் குன்றாமல் காப்பாற்றப்படுகிறது. மண்வளத்தை காத்து நீடித்த நிலையான மகசூல் பெற்றிட அனைத்து விவசாயிகளும் திட்டமிட வேண்டும் என்றார்.
குடும்ப அட்டையில் திருத்தம்: குறைதீர் முகாம்
மயிலாடுதுறை, ஏப்.17 - மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோ யில் அருகேயுள்ள மேலை யூரில் தரங்கம்பாடி உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை வட்ட வழங்கல் அலுவ லகம் சார்பில் ரேசன் கார்டு தொடர்பான மக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது. வட்ட வழங்கல் அலுவலர் பாபு தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் நளினி ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். முகா மில் ரேசன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல், பெயர் மற்றும் முகவரி திருத்தம், குடும்ப தலைவர் மாற்றம், முகவரி மாற்றம், கைபேசி எண் மாற்றம் உள்ளிட்ட பணி கள் மேற்கொள்ளப்பட்டன. காலை முதல் மாலை வரை நடந்த இம்முகாமில் கஞ்சா நகரம், கருவாழக்கரை, மேலையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பொது மக்கள் 100-க்கும் மேற்பட் டோர் தங்கள் குடும்ப அட்டை யில் உள்ள குறைபாடுகள் தொடர்பாக மனு அளித்து உடனடியாக தீர்வு பெற்ற னர்.
மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் ஆய்வுக் கூட்டம்: அமைச்சர் பங்கேற்பு
திருச்சிராப்பள்ளி, ஏப்.17 - திருச்சி மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் அமைச்சர் கே. என்.நேரு தலைமையில் சனிக்கிழமை மாநகராட்சி மைய அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் நகரத்திட்ட குடிநீர் பணிகள் நடைபெற்று வரும் பகுதி களான, தென்னூர், அண்ணாநகர், புத்தூர், சிந்தாமணி, தில்லைநகர், மரக்கடை, மலைக்கோட்டை, உறையூர் ஆகிய பகுதிகளில் உள்ள குடிநீர் குழாய்களை புனரமைக்கப்பட்டு, 43,114 வீட்டு இணைப்புகள் புதுப்பிக்கப்பட உள்ளன. 4 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மேம்படுத்தப்பட உள்ளதை விரைந்து முடித்து, பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்கப்பட வேண்டு மெனவும், போக்குவரத்திற்கும் பொது மக்களுக்கும் இடையூறின்றி பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் பாதாள சாக்கடை கழிவு நீர் குழாய் மறுசீர மைக்கும் திட்டப் பணிகள், வரையறுக் கப்பட்ட பகுதிகளில் மொத்தம் 37 வார்டு களில் பாதாள சாக்கடை திட்டம் 3 தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. மேற்படி 37 வார்டுகளில், 13 வார்டுகளில் முழுவது மாகவும் மற்றும் 24 வார்டுகளில் பகுதி யாகவும் திட்டப்பணி நடைபெற்று வரு கின்றன. ஆய்வு கூட்டத்தில் மேயர் அன்ப ழகன், ஆணையர் முஜிபுர் ரகுமான், துணை மேயர் திவ்யா, நகரப் பொறியா ளர் அமுதவல்லி, செயற்பொறியா ளர்கள் சிவபாதம், குமரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.