districts

மதுரை முக்கிய செய்திகள்

கல்லூரி மாணவர்கள் ரத்த தானம் 

இராமநாதபுரம், ஏப்.28- இராமநாதபுரம் மாவட்டம் திரு வாடானை அரசு கலை மற்றும் அறிவி யல் கல்லூரி ரெட் ரிப்பன் கிளப், இராம நாதபுரம் அரசு தலைமை மருத்துவ மனை ரத்த வங்கி சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது.  முகாமினை திருவாடானை வட்டாட்சியரும், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவருமான  ஆர்.செந்தில்வேல் முரு கன் ரத்த தானம் செய்து துவக்கி வைத்தார். முகாமில் கல்லூரி மாணவ, மாணவியர் 54 பேர் உள்ளிட்ட 56 நபர்கள் ரத்த தானம் செய்தனர்.  கல்லூரி முதல்வர் மாதவி பேராசி ரியர்கள், பாண்டுகுடி மருத்துவ அலு வலர் டார்லிங்டன், ரத்த வங்கியின் மருத்துவ அலுவலர், நாட்டு நலப்பணித் திட்ட பொறுப்பாளர் சுரேஷ், மருத்துவ ஆலோசகர் சாந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

எரிந்த நிலையில்  ஆண் சடலம்

அருப்புக்கோட்டை, ஏப்.28- அருப்புக்கோட்டை நகாரட்சி மயா னத்தில் தகனம் செய்யும் தொழிலாளி யாக பணிபுரிந்து வருபவர் அழகுமுரு கன். இவர் வழக்கம் போல மயான வேலைக்கு சென்ற போது, அங்கு உடல்  முழுவதும் எரிந்த நிலையில் ஆண் சடலம் கிடந்துள்ளது.  எனவே, இதுகுறித்து துப்புரவு ஆய்வாளர் சரவணனுக்கு தகவல் தெரி வித்துள்ளார். அவரது புகாரின் பேரில் அருப்புக்கோட்டை நகர் காவல்துறை யினர் வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

வெள்ளைத் திரி பறிமுதல்:  ஒருவர் கைது

விருதுநகர், ஏப்.28- விருதுநகர் அருகே ஒண்டிபுலி நாயக்கனூர் சாலையில் ஆமத்தூர் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள பாலத்தில் சாக்கு பையுடன் சென்ற வரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.  இதில், அனுமதியின்றி பட்டாசு தயா ரிக்க பயன்படும் 220 குரோஸ் வெள்ளைத் திரிகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர் திரிகளை கொண்டு சென்ற அய்யப்பன் (42) என்ப வரை கைது செய்தனர்.

விளையாட்டு விழா

திருவில்லிபுத்தூர், ஏப்.28-  திருவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைக்கழக 38-ஆவது ஆண்டு விளையாட்டு விழா பல்கலை துணைத் தலைவர் முனைவர் எஸ்.சசிஆனந்த் தலைமையில் நடைபெற்றது. துணைவேந்தர்ஆர்.நாகராஜ், பதிவாளர்வி.வாசுதேவன் ஆகியோர் துவக்கி வைத்தனர். தமிழ்நாடு விளை யாட்டு மேம்பாட்டுஆணையம், விருது நகர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளை ஞர் நல அதிகாரி பி.ராஜா கலந்து  கொண்டு வெற்றி பெற்ற மாணவர்க ளுக்கு கேடயமும், சான்றிதழ்களையும் வழங்கினார். ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை, ஸ்கூல் ஆப் கம்ப்யூட்டிங் அணியின ரும், இரண்டாவது இடத்தை கலச லிங்கம் பிஸினஸ் ஸ்கூல் அணியினரும் பெற்றனர்.

அப்துல்கலாம் நினைவிடத்தில் ஆர்எஸ்எஸ்  தலைவர்கள் படங்கள்: சிபிஎம் கண்டனம் கடும் எதிர்ப்பால் பின்னர் படங்கள் அகற்றம்

இராமநாதபுரம், ஏப்.28-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  இராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் வி.காசிநாததுரை வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: இராமேஸ்வரத்தில் அமைக்கப் பட்டுள்ள அப்துல்கலாம் நினைவிடத் தில் ஒன்றிய செய்தி ஒலிபரப்பு அமைச்ச கத்தின் சார்பில்   பிப்ரவரி 27 முதல் மே 1  வரை சுதந்திரப் போராட்ட வீரர்களின் திரு வுருவப் படக்கண்காட்சி திறக்கப் பட்டுள்ளது.  சுதந்திரப் போராட்ட வீரர்கள் படங்க ளுடன், சுதந்திர போராட்டத்தில் எவ்வித பங்களிப்பும் செய்யாதது மட்டுமல்ல, பிரிட்டிஷ் அரசுக்கு ஆதரவாக செயல்  பட்ட ஆர்.எஸ்.எஸ்.  ஸ்தாபக தலை வர்களான ஹெட்கேவர், கோல்வால்கர் ஆகியோரது படங்களையும் இணைத்து ஒன்றிய அமைச்சகம் வைத்திருந்தது. இது வன்மையாக கண்டிக்கத் தக்கது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  இராமேஸ்வரம் தாலுகா செயலாளர் ஜி.சிவா, இ.ஜஸ்டின் உள்ளிட்ட தோழர்கள் அப்துல்கலாம் நினைவி டத்தில் வைக்கப்பட்டுள்ள ஆர்எஸ்எஸ்  தலைவர்கள் படங்களை அப்புறப்படுத்த வேண்டும் என அரசு அதிகாரிகளிடம் கூறி னர். அதன்பின் ஹெட்கேவர், கோல்வால்  கர் படங்கள் அப்புறப்படுத்தப்பட்டன.  ஒன்றிய பாஜக அரசு தனக்கு சாதக மாக  தொடர்ந்து வரலாற்றை திரித்து  எழுதி வரும் சூழலில் தமிழக அரசும் மக்க ளும் இப்படிப்பட்ட அத்துமீறல்களை அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

மானாமதுரை மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கழிப்பறை வசதி ஏற்படுத்துக! ஆட்சியரிடம் சிபிஎம் கோரிக்கை மனு

சிவகங்கை, ஏப்.28-  மானாமதுரை அனுசியா மஹாலில் மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் ரெட்டி தலைமையில் குறைதீர் முகாம் நடை பெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், பிஆர்ஒ நாக ராஜபூபதி, துணை ஆட்சியர் காமாட்சி,  மானாமதுரை நகர் மன்ற தலைவர் மாரி யப்பன் கென்னடி, துணைத்தலைவர் பாலசுந்தரம், ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் லதா அண்ணாதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  முகாமில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் முனியராஜ், விஜயகுமார், பாலசுப்பி ரமணியன், ராஜாராமன் ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், மானாமதுரை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 1500 மாணவிகள் படிக்கின்றனர். இப் பள்ளியில் கழிப்பிட வசதி இல்லாத நிலை  உள்ளது. விளையாட்டு மைதானமும் இல்லாத நிலை உள்ளது. நெடுஞ்சாலைத் துறை அலுவலகம், கஸ்தூரிபா விடுதியை வேறு இடத்திற்கு  மாற்ற வேண்டும் என்று தெரிவிக் கப்பட்டுள்ளது.  மனுவினை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட அதி காரிகளை அழைத்து தீர்வு காண்பதாக கூறினார்.

அதிகாரி வீட்டில்   நகை, பணம் திருட்டு

விருதுநகர், ஏப்.28- விருதுநகர் அருகே ஓய்வு பெற்ற கூட்டுறவுத்துறை அதிகாரி வீட்டில் 12 பவுன் நகை மற்றும் ரூ.1.60 லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். விருதுநகர் அருகே உள்ளது எட்டுநாயக்கன்பட்டி. இங்குள்ள ஆசிரி யர் குடியிருப்பைச் சேர்ந்தவர் ஜெக தீசன் (63). கூட்டுறவுத் துறை அதிகாரி யாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இந்நிலையில் தனது மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.  திரும்பி வந்து பார்த்த போது, வீட்டின் முன் பக்க கதவின் பூட்டு உடைக்கப் பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது, பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த 12.1/2 பவுன் தங்க நகைகள் மற்றும் ரொக்கப் பணம் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் மற்றும் வெள்ளிக் கொலுசுகள் உள்ளிட்டவை திருடு போனதது தெரிய வந்தது. இதுகுறித்து ஜெகதீசன் வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.