கிரஷர் எந்திரத்தில் சிக்கி தொழிலாளி பரிதாப சாவு
திருநெல்வேலி, ஜன. 11- நெல்லை மாவட்டம், விக்கிரம சிங்கபுரம் அருகே கோட்டவிளை பட்டியைச் சேர்ந்தவர் மாடசாமி (40). இவர் ஆழ்வார்குறிச்சி அருகே கீழ ஆம்பூர் மெயின் ரோட்டில் தனியார் எம்.சாண்ட் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் திங்கட் கிழமை மாலையில் எம்.சாண்ட் நிறுவ னத்தில் பாறைகளை தூளாக்கும் கிரஷர் எந்திரத்தின் அருகில் நின்று வேலை செய்து கொண்டிருந்தார்.அப்போது எதிர்பாராதவிதமாக கிரஷர் எந்திரத்தில் சிக்கிய மாடசாமி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆழ்வார்குறிச்சி போலீசார் விரைந்து சென்று, மாடசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல் வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்ப வம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர். இறந்த மாடசாமிக்கு மகேசுவரி என்ற மனைவியும், ஸ்ரீராம் (12), ராகிணி (12) ஆகிய இரட்டை குழந்தைகளும் உள்ளனர்.
கிரிக்கெட் மட்டையால் தாக்கி பெண் கொடூர கொலை
திருநெல்வேலி ,ஜன. 11- பழவூரில் நடத்தை சந்தேகத்தில் பெண்ணை கிரிக்கெட் மட்டையால் தாக்கி கொலை செய்த அவரது கணவரை போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்டம் பழவூா், தெப்பக்குளம் தெருவைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் சுடலையாண்டி. இவரது மனைவி ஜெயலெட்சுமி (36). 15 ஆண்டுக ளுக்கு முன்பு திருமணமான இவா்களு க்கு 3 மகன்கள் உள்ளனா். ஜெயலெட்சுமி க்கு வேறு நபருடன் பழக்கம் இருந்ததா கவும், இதை சுடலையாண்டி அடிக்கடி கண்டித்து வந்ததாகவும், இதனால் தம்பதியிடையே தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலை யில், அவா்களிடையே திங்களன்று மீண்டும் தகராறு ஏற்பட்டதாம். இதில், ஆத்திரமடைந்த சுடலை யாண்டி கிரிக்கெட் மட்டையாலும், தேங்காய்த் துருவியால் ஜெயலெட்சுமி யைத் தாக்கினாராம். இதில், அவா் சம்பவ இடத்திலேயே இறந்தார். சப்தம் கேட்டு அப்பகுதியினா் வந்து, சுடலை யாண்டியை பிடித்து பழவூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். அவரை போலீசார் கைது செய்தனா்; ஜெயலெட்சு மியின் சடலத்தைக் கைப்பற்றி, நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோத னைக்கு அனுப்பினா். இது தொடா்பாக வள்ளியூா் ஏ.எஸ்.பி. சமய் சிங் மீனா விசாரணை நடத்தினார். போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வரு கின்றனா்.
சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற கால நீட்டிப்பு
நகர்கோவில். ஜன. 11 சிறுபான்மையின மாணவர்களுக் கான தகுதி மற்றும் வருவாய் அடிப்ப டையிலான கல்வி உதவித்தொகை திட்டம் குறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ம. அரவிந்த் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவை யாவது தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனி யார் கல்வி நிலையங்களில் பதினொன் றாம் வகுப்பு முதல் பி.எச்.டி. படிப்பு வரை (தொழிற்கல்வி, தொழில்நுட்ப கல்வி, மருத்துவம் உட்பட) பயிலும் இஸ்லா மிய, கிறித்துவ, சீக்கிய புத்த, பார்சி மற்றும் ஜெயின் மதங்களைச் சார்ந்த மாணவ/ மாணவியர்களிடமிருந்து 2021-2022 ஆம் ஆண்டிற்கு ஒன்றிய அரசின் பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் (புதியது மற்றும் புதுப்பித்தல்) உத வித்தொகை பெறுவதற்கான விண்ணப் பங்கள் இணையதளம் மூலம் www.scholarships.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க 15.01.2022 வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும், அனைத்து கல்வி நிலையங்க ளும் சிறுபான்மையினர் கல்வி உத வித்தொகை கோரி மாணவ மாணவியர்க ளிடமிருந்து வரப்பெற்ற விண்ணப்பங்க ளை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தேசிய கல்வி உதவித்தொகை இணை யத்தில் சரிபார்க்க வேண்டும் எனவும் தகுதியுள்ள சிறுபான்மையின மாணவ மாணவியரின் விண்ணப்பத்தினை சரி பார்ப்பதில் தவறும் கல்வி நிலையங்க ளின்மீது அரசால் தக்க நடவ டிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவுறுத் தப்படுகிறது. பள்ளி படிப்பு உதவித்தொகை 15.01.2022 மற்றும் பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்ப டையிலான கல்வி உதவித்தொகை 31.01.2022 ஆகிய தினங்கள் சரி பார்க்க இறுதி தேதியாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சாலை சீரமைப்பு பணி அதிகாரிகள் ஆய்வு பணி தரமாக உள்ளது என தகவல்
நாகர்கோவில், ஜன.11- களியக்காவிளை பகுதியில் சாலை சீரமைப்பு பணி தரமாக இல்லை என புகார் தெரிவிக்கப்பட்ட பகுதிகள் உட்பட செவ்வாயன்று (ஜன.11) அதிகாரிகள் ஆய்வு செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்கனவே சீரழிந்து காணப்பட்ட சாலைகள் கடந்த சில மாதங்களாக பெய்த கன மழையில் படுமோசமான நிலையில் பயணம் செய்யவே தகுதியற்றவையாக மாறின. இந்நிலையில் கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரையிலான 51 கிலோ மீட்டர் தேசிய நெடுஞ்சாலையில் குண்டும், குழியுமாக சேதமடைந்த பகுதிகளை சீரமைக்க ரூ.24.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப் பப்பட்டு சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. களியக்காவிளை அருகில் உள்ள திருத்துவபுரம் பகுதியில் இவ்வாறு சாலை சீரமைப்பு பணி நடந்தபோது தரமற்ற முறையில் சாலைப்பணி நடை பெறுவதாக புகார் தெரிவித்து சிலர் பணியை தடுத்து நிறுத்தினர். இதுபற்றிய தகவல் அறிந்த தேசிய நெடுஞ்சாலை நெல்லை கண்காணிப்பு பொறியாளர் பழனியப்பன், நெல்லை தரக் கட்டுப்பாட்டு அதிகாரி ஜெயப்பிரகாஷ் மற்றும் குமரி மாவட்ட தேசிய நெடுஞ்சாலை கோட்டப் பொறியாளர் ஜெகன்மோகன் ஆகியோர் திங்களன்று கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரையிலும் ஆய்வு செய்தனர். புகார் தெரிவிக்கப்பட்ட திருத்துவபுரம் பகுதி யிலும் ஆய்வு செய்தனர். பின்னர் கோட்டப் பொறி யாளர் ஜெகன் மோகன் கூறும்போது, சாலை சீரமைப்பு பணி தரமான முறையில்தான் நடந்துள் ளது. இதை உயர் அதிகாரிகள் நெல்லை யில் இருந்து வந்து தரப்பரிசோதனை செய்தனர். இதில் சாலை தரமாக அமைக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது என்றார். இது தொடர்பாக இந்த சாலைப்பணி யின் ஒப்பந்ததாரர் கைலாஷ்குமார் கூறும்போது, அரசு நிர்ணயித்துள்ள தரத்தில் இந்த சாலைப்பணி செய்யப் பட்டுள்ளது. ஆனால் சிலர் வேண்டும் என்றே தவறான தகவலை பரப்பினர். இதனை யாரும் நம்ப வேண்டாம். இந்த சாலைப் பணியின் தரத்துக்கு தான் பொறுப்பு ஏற்பதாக கூறினார்
3 நாட்கள் டாஸ்மாக் கடை, பார்களை மூட ஆட்சியர் உத்தரவு
திருநெல்வேலி ,ஜன. 11- திருவள்ளுவர் தினம், வள்ளலார் இராமலிங்க னார் நினைவு நாள் மற்றும் இந்தியக் குடியரசு தினம் ஆகிய தினங்களில் மதுபானக்கடைகள் மற்றும் மதுபானக் கூடங்கள் அனைத்தும் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 15.01.2022 (சனிக்கிழமை) திருவள்ளுவர் தினம், 18.01.2022 (செவ்வாய்க் கிழமை) வள்ள லார் இராமலிங்கனார் நினைவு நாள் மற்றும் 26.01.2022 (புதன் கிழமை) குடியரசு தினம் ஆகிய தினங்களை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தால் (டாஸ்மாக்) நடத்தப்படும் மதுபானக்கடைகள் அவற்றுடன் இணைந்த மதுபானக் கூடங்கள், கிளப்புகள், தங்கும் விடுதிகளுடன் இணைந்த உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என ஆணையிடப்பட்டுள்ளது. எனவே திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மதுபா னக்கடைகள் அவற்றுடன் இணைந்த மதுபானக் கூடங்கள், கிளப்புகள் மற்றும் தங்கும் விடுதிகளுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் அனைத்தும் 15.01.2022 (சனிக்கிழமை) திருவள்ளுவர் தினம், 18.01.2022 (செவ்வாய்க்கிழமை) வள்ளலார் இராம லிங்கனார் நினைவு நாள் மற்றும் 26.01.2022 (புதன்கிழமை) குடியரசு தினம் ஆகிய தினங்களில் மூடப்பட்டிருக்கும் என மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு, தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற உறுப்பினருக்கு கொரோனா
விருதுநகர், ஜன.11- விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருபவர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்திதொடரில் கலந்து கொண்டார். பின்பு, சொந்த ஊருக்கு திரும்பிய நிலை யில், உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள் ளது. இதையடுத்து, அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதன் முடிவில், அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. எனவே, அவர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள் ளார் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் தம்முடன் இருந்தவர்கள் தங்களை தனிமைப் படுத்திக் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.
பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 12 பேரின் வாரிசுதாரர்களுக்கு நிவாரணம்
விருதுநகர், ஜன.11- விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளில் பணிபுரிந்த போது, ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்த 12 பேரின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.3 லட்சம் வீதம் ரூ.36 லட்சத்தை வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச் சந்திரன், தொழில்துறை அமைச்சர் தங் கம் தென்னரசு ஆகியோர் வழங்கினர். தொடர்ந்து பத்து மாற்றுத் திறனாளிகளு க்கு மாதம் தலா ரூ.1000 ஓய்வூதியம் பெறு வதற்கான ஆணைகளை வழங்கினர். இந்நிகழ்வில்ல் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் மங்கள.ராமசுப்பிரமணியன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துறை ஆட்சி யர் கிருஷ்ணவேணி ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.
பாலியல் தொல்லை; 20ஆண்டு சிறை
தேனி, ஜன.11- தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள மணியக்காரன்பட்டியைச் சேர்ந்த வர் தங்கசாமி (49). கூலித் தொழிலாளி. ஒன்பது வயது சிறுமியை கடந்த ஆண்டு ஜூலை 23-ம் தேதி பாலியல் தொந்தரவு செய்துள்ளார். சிறுமியின் தந்தை கொடுத்த புகா ரின்பேரில் ஆண்டிபட்டி அனைத்து மக ளிர் காவல்துறையினர் தங்கசாமியை போக்ஸோவில் கைது செய்தனர். இது குறித்த வழக்கு தேனி மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி வெங்கடேசன் குற்றவாளிக்கு 20ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்ட னையும், ரூ.5ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார்.
‘நரக மாளிகை’ நூல் அறிமுகம்
திண்டுக்கல், ஜன.11- திண்டுக்கல்லில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பு சார்பில் நரக மாளிகை நூல் அறிமுக விழா நடைபெற்றது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் செயலாற் றிய கேரளாவைச் சேர்ந்த சுரேஷ்மின்னி என்பவர் அந்த அமைப்பிலிருந்து முரண் பட்டு வெளியேறி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். ஆர்.எஸ்.எஸ். என்ற அந்த அமைப்பு குறித்து சுரேஷ்மின்னி ‘நரக மாளிகை’ என்ற புத்தகம் எழுதியுள்ளார். தமிழில் கே.சதாசிவன் என்பவர் மொழி பெயர்த் துள்ளார். இந்த நூலின் அறிமுக விழா திங்களன்று மாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள எஸ்.எஸ்.எஸ். மீட்டிங் ஹாலில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மருத்துவர் அமலாதேவி தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் வருணன் வரவேற்றார். செம் மலர் மாத இதழ் ஆசிரியர் சோழ.நாக ராஜன் கலந்து கொண்டு நூலை அறி முகம் செய்து சிறப்புரையாற்றினார். மேனாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பால பாரதி வாழ்த்தி பேசினார். கே.எஸ்.கணே சன் நன்றி கூறினார். (நநி)
ரயில்வே பாதையில் தாமிர கம்பிகள் மாயம்
அருப்புக்கோட்டை, ஜன.11- அருப்புக்கோட்டை அருகே மேலதொட்டி யாங்குளம் ரயில் பாதையில் 70 மீட்டர் தாமிரக் கம்பிகளை திருடிச் சென்றவர்களை காவல்துறையி னர் தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் மேலகொத்தத் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் (52) இவர் தனியார் நிறுவனத்தின் நிர்வாகியாகப் பணி புரிந்து வருகிறார். இவரது நிறுவனம் சார்பில் மானாமதுரை-அருப்புக்கோட்டை வரை மின்சார பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி 8 ஆம் தேதி காலை மானாமதுரையி லிருந்து விருதுநகர் நோக்கிச் சென்ற சிலம்பு விரைவு ரயில் தாமிர கம்பியில் சிக்கி நின்றது. இதனால், மூன்று மணி நேரம் ரயில் தாமதமாகச் சென்றது. இதுகுறித்து நடைபெற்ற விசாரணை யில், அங்கிருந்த 70 மீட்டர் தாமிரக் கம்பிகளை அடையாளம் தெரியாத நபர்கள்திருடிச்சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெறுகிறது.