சிவகங்கை, ஜன.13- சிவகங்கை மாவட்டம் மானா மதுரை ஊராட்சி ஒன்றியம் கீழ மேல்குடி ஊராட்சி யில் 14 மற்றும் 15 ஆவது மானியக் குழு நிதியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ள தாக ஊராட்சி மன்ற தலைவர் ராமு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நமது செய்தி யாளரிடம் கூறியதாவது: கீழ மேல்குடி ஊராட்சியில் மக்கள் தொகை மிகவும் குறைவாகும். இங்கு உள்ள கண்மாய்க்கு வைகை ஆற்றிலி ருந்து கால்வாயை மேம்படுத்தி 11 ஆண்டுகளுக்குப் பின்பு கண்மாய்க்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டது. தண்ணீர் கொண்டு வருவதற்கு உதவியாக இருந்த கீழ மேல்குடி கிராம மக்கள், மாவட்ட ஆட்சியர், மானா மதுரை சட்டமன்ற உறுப்பினர் தமி ழரசி, மானாமதுரை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் லதா, பொதுப்பணித் துறை அதிகாரிகள், ஊரக வளர்ச்சி துறை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோரின் ஒத்துழைப்போடு கால்வாய்களை மேம்படுத்தி வைகை ஆற்றில் தொடர்ந்து தண்ணீர் வந்தது. கீழ மேல்குடி ஊராட்சிக்குட்பட்ட ஸ்ரீ சோமநாதர் நகர் பகுதிக்கு சாலை அமைப்பதற்கு ரூ.16 லட்சம் நிதி ஒதுக் கப்பட்டுள்ளது. பிரதான வீதியில் 750 மீட்டர் சாலை அமைக்கப்பட உள்ளது. குளியல் தொட்டி, பேவர் பிளாக் அமைக் கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 570 குடும்பத்தினர் அட்டைகள் பெற்றுள் ளனர். வறட்சியை தாங்கி வாழும் பனை மரம் வளர்க்கும் திட்டத்தில் 2 ஆயிரம் பனைவிதைகள் நடவு செய்யப்பட்டுள்ளன. பனை மர விதை நடவு செய்து அவரைப் பாதுகாத்து வளர்ப்பதில் அக்கறையோடு செயல் படுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.