உலக வங்கி அறிக்கையில் தகவல்
புதுதில்லி, டிச.13- கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக உலக நாடுகள் பலவும் பொதுமுடக்கத்தை அறிவித்தன. உற்பத்தி நிறுத்தப்பட்டு, தொழில், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன. கோடிக்கணக்கானோர் வேலையி ழப்புக்கு உள்ளாகினர். கொரோனா தொற்று அச்சம் காரணமாக பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களை யும் சுமார் ஒன்றரை ஆண்டுகளாக திறக்க முடியவில்லை. நடுத்தர, ஏழை நாடுகளைச் சேர்ந்த மாண வர்களுக்கு கல்வி கிடைக்காத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில்தான், ‘உலகளா விய கல்வி நெருக்கடி நிலை - மீட் சிக்கான பாதை’ என்ற தலைப்பில் யுனெஸ்கோ மற்றும் யுனிசெப் ஆகி யவற்றுடன் இணைந்து உலக வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “கொரோனா நெருக்கடி உலகெங்கிலும் கல்வி அமைப்பை சீர்குலைத்துள்ளது. தற்போது 21 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், லட்சக்கணக்கான குழந்தைகளுக் கான பள்ளிகள் இப்போதும் மூடியே இருக்கின்றன. மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு திரும்ப முடியாத நிலையை உருவாக்கி உள்ளது. பல குழந்தைகள் அனுபவிக்கும் கற்றல் இழப்பு தார்மீக ரீதியாக ஏற்றுக் கொள்ள முடியாதது.
மேலும் கற்றல் குறைபாட்டிற் கான சாத்தியக்கூறுகள் அதிகரிப் பது, இந்த தலைமுறை குழந்தைகள் மற்றும் இளைஞர்கள், அவர்களது குடும்பங்கள் மற்றும் உலகப் பொரு ளாதாரங்களின் எதிர்கால உற்பத்தி, வருவாய் மற்றும் நல்வாழ்வு ஆகி யவற்றில் பேரழிவுகரமான தாக் கத்தை ஏற்படுத்தக்கூடும். இந்த தலைமுறை குழந்தைகள் வருவாய் ஈட்டுவதில் பாதிப்பு ஏற்பட்டு, ஒரு முழு தலைமுறையையும் ஏழ்மை யில் தள்ளப்படும் அபாயம் உள் ளது” என்று தெரிவித்துள்ளது. குறிப்பாக, “பிரேசில், பாகிஸ் தான், கிராமப்புற இந்தியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் மெக்சிகோ வில் மாணவர்கள் கணிதம் மற்றும் வாசிப்பில் கணிசமான இழப்புகளை சந்தித்துள்ளனர். குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடு களில் வாழும் 20 கோடிக்கும் அதிக மான மாணவர்கள் தொலைநிலைக் கற்றல் வசதியை பெறும் நிலையில் இல்லை.
எனவே, பள்ளிகளை மீண்டும் திறப்பது உலகளவில் முதன்மை யான மற்றும் அவசர முன்னுரிமை யாக இருக்க வேண்டும். கற்றல் இழப்புகளை ஈடுசெய்ய உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும். அப் போதுதான் இந்தத் தலைமுறை மாணவர்கள் குறைந்தபட்சம் முந் தைய தலைமுறையின் அதே திறன் களைப் பெறுவதை உறுதி செய்ய முடியும்” என்றும் குறிப்பிட்டுள்ளது. பள்ளிகளை மூடியதால் ஏற்பட்ட கற்றல் இழப்பு காரணமாக, தற்போ தைய தலைமுறை மாணவர்கள் தங்களின் வாழ்நாள் வருவாயில் மொத்தம் ரூ. 1,275 லட்சம் கோடி யை இழக்க நேரிடும். இது உல களாவிய மொத்த உள்நாட்டு உற் பத்தி மதிப்பில் 14 சதவிகிதம் ஆகும். எனவே, கற்றல் இழப்புகளை சரி கட்ட, மீள்நடவடிக்கைகளுக்கு அதிகளவு நிதியை அரசாங்கங்கள் ஒதுக்க வேண்டும். இவ்வாறு உலக வங்கி தனது அறிக்கையில் கூறியுள்ளது. இதற்கு முன்பு, கடந்த 2020- இல் ரூ.750 லட்சம் கோடி அள விற்கே இழப்பு இருக்கும் என கணிக் கப்பட்டது அது தற்போது இரட்டிப் பாகியுள்ளது.