அரசு உதவிபெறும் கல்லூரி பேராசிரியர்ளுக்கு மட்டும் நீண்ட காலமாக பணி மேம்பாடு வழங்காமல் இருக்கும் தமிழக அரசை கண்டித்து விருதுநகர் செந்தில்குமார் நாடார் கல்லூரி மூட்டா கிளையின் சார்பில் கல்லூரி வாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிளை துணைத்தலைவர் இ.ஜெயபாரதி தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் இரா.சண்முகவேல், இணைச்செயலாளர் பி.பாரதி உள்ளிட்ட திரளான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.