மதுரை, ஏப்.11- மதுரை யாதவர் மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறை வைகறை இலக்கிய வட்டத்தின் சார்பில் முத்தமிழ் விழா செவ்வாய்க்கிழமை யன்று நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரியின் தலைவர் செள.அருண்போத்திராஜ் தலைமை வகித்தார். கல்லூரியின் செயலர்- தாளாளர் செள. இந்திராணி தொடங்கி வைத்தார். கல்லூரி யின் முதல்வர் (பொ) முனைவர் வெ.புஷ்ப லதா வரவேற்றுப் பேசினார். மதுரை மக்க ளவை உறுப்பினர் சு. வெங்கடேசன் சிறப்பு ரையாற்றினார். கல்லூரியின் துணைத் தலை வர் அன்னபூர்ணா தீ.தங்கராஜ் , பொருளா ளர் வி. ஜெயலட்சுமி, ஆட்சிக்குழு உறுப்பி னர்கள் இயக்குனர், துணை முதல்வர் ஆகி யோர் வாழ்த்திப்பேசினார்கள். தமிழ் துறை தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் பா. பனிமலர் நன்றி கூறினார். சு.வெங்கடேசன் எம்.பி, பேசியதாவது: ஐரோப்பியர்கள் உலகத்தின் மிகப் பழைய மொழி என்று லத்தீன் மொழியை சொல்கிறார்கள். லத்தீன் மொழியில் 2 ஆயி ரம் வருடத்திற்கு முன்னால் எத்தனை பெண் கள் எழுதி இருக்கிறார்கள் என்று பார்த்தால், 7 பெண் எழுத்தாளர் மட்டுமே எழுதியுள்ள னர். ஆனால் 2000 வருடங்களுக்கு முன்பு 40 பெண் எழுத்தாளர்களைக் கொண்ட ஒரே உலக மொழி தமிழ் மொழி என்பதுதான் சிறப்பு. சமஸ்கிருத மொழியில் ஒரு பெண் எழுத் தாளர் கூட கிடையாது. சமஸ்கிருத மொழி யை பெண்கள் படிப்பதற்கே அனுமதி கிடை யாது. உலகப் புகழ் பெற்ற சமஸ்கிருத நாட கத்தில் அரசன் சமஸ்கிருதத்தில் தான் பேசு வார். ஆனால் அரசி சமஸ்கிருத மொழி யில் பேச மாட்டார். பிராகிருத மொழியில் பேசு வார். கற்பனை கதாபாத்திரமாக இருந்தா லும் கூட பெண்கள் சமஸ்கிருதத்தை படிக் கக்கூடாது என்பதுதான் விதி. ஆங்கிலம் தெரியாது, பிரெஞ்சு தெரி யாது, எனக்கு தமிழ் மட்டும்தான் தெரியும் என்ற தாழ்வு உணர்ச்சி குற்ற உணர்ச்சி இருக்கிறது அல்லவா? அதுதான் நம்மை போன்ற பின்தங்கிய மாணவ, மாணவி களுக்கு இருக்கிற மிகப்பெரிய பிரச்சனை. அந்த தாழ்வு உணர்ச்சியை நீங்கள் கைவிட வேண்டும்
மணிமேகலையில் ஒரு அரசன் சாதாரண பெண்ணிடம் தன் காதலை தெரிவிக்கிறான். காதலை அந்த பெண் ஏற்க மறுத்து சென்று விடுகிறாள். அரசனே வந்து காதலை சொன் னாலும் எனக்கு பிடித்தால் மட்டுமே நான் ஏற்றுக் கொண்டால் மட்டுமே உன்னை அனுமதிப்பேன். இல்லையென்றால் உன் காதலை அனுமதிக்க மாட்டேன் என்று சொல்லுகின்ற தைரியமும் சுய அறிவும் கொண்ட பெண்ணாக தமிழ் இலக்கியத்தில் உள்ள பெண்கள் சித்தரிக்கப்பட்டுள்ளனர் என்பதுதான் மிக முக்கியமானது. கீழடியில் கிடைத்திருக்கிற பானை ஓடுகளில் 136 பானை ஓடுகளில் எழுத்துக்கள் இருக்கின்றன. இந்த பானை ஓடுகள் மிக அதிகம் பெண்களோடு சம்பந்தப்பட்டது. ஆண்- பெண் என்ற பாகுபாடு இல்லாத இலக்கியமாக நம்முடைய தமிழ் இலக்கியம் இருந்திருக்கிறது. தமிழ்ச்சமூகம் இருந்தி ருக்கிறது என்பது மிக முக்கியமானது. இன்றைக்கு சமூக வலைத்தளங்கள் ஆக்கிரமித்துள்ள ஒரு காலம். பொழுது போக்கு ஊடகங்கள் வாழ்வின் பெரும்பகுதி யை ஆக்கிரமிக்கிற போது பெண் என்பவள் ஒரு போக பொருளாக, பொழுதுபோக்கு பொருளாக மட்டுமே மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிற நேரத்தில் பெண்களாகிய நீங்கள் வலிமையோடு இயங்க வேண்டும். சுய பார்வையை உருவாக்கிக் கொள்ள வேண்டும். எந்த துறையை வேண்டுமானா லும் எடுத்துப்படியுங்கள். அவையெல்லாம் உங்கள் அறிவை வளர்க்கும். ஆனால் இலக்கியம் மட்டும் தான் உங்கள் ஆளுமை யை வளர்க்கும். ஏதாவது ஒரு கதையை, கவிதையை, நாவலை அவசியம் அனை வரும் படியுங்கள்! அதுதான் நீங்கள் யார் என்பதை உங்களுக்கு சொல்லும்.உங்கள் ஆளுமையை வளர்க்கும். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் புறநகர் மாவட்டச் செயலா ளர் கே.ராஜேந்திரன், மாநிலக்குழு உறுப்பி னர் எஸ்.பாலா, ஒன்றியச் செயலாளர் பி. ஜீவானந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.