districts

img

சமூக நல்லிணக்க பேரவை சார்பில் தேனியில் இலக்கிய நிகழ்வு

தேனி, ஜூன் 6- தேனியில் சமூக நல்லிணக்க பேரவையின் சார்பில் சிறப்பு கருத்தரங்கம்,நூல் அறிமுகம், எழுத்தா ளர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பேரவை கௌரவத் தலை வர் ஹபிபுல்லா தலைமை தாங்கினார் .உமர் பாரூக்  எழுதிய அழ நாடு கட்டுரை நூல் குறித்து முத்துக் குமார், யாழ் ராகவன் எழுதிய சந்தை நாவல் குறித்து அனூரூபா, கூடல் தாரிக் எழுதிய ஆகாயத் தினை கவிதை நூல் குறித்து ராஜபிரபா,அல்லி உதயன் எழு திய அரண் நாவல் குறித்து தேனி ஜாகீர் ஆகியோர் நூல் அறிமுகம் செய்து உரையாற்றினர். தமிழ்நாடு அரசின் தமிழ்ச் செம்மல் விருது பெற்ற  மூத்த எழுத்தாளர் தேனி சீருடையான், கோவை விஜயா வாசகர் வட்டம் வழங்கிய புதுமைப்பித்தன் விருது பெற்ற மூத்த எழுத்தாளர் காமுத்துரை ஆகி யோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பேரவை தலைவர் முகமது சபி பாராட்டுரை வழங்கினார். பேராசிரியர் அப்துல் காதர் “விண்ணாக வேண்டும் மண்” எனும் தலைப்பில் சிறப்புரை நிகழ்த்  தினார்.நிகழ்வில் தேனி துணைக் காவல் கண்கா ணிப்பாளர் பார்த்திபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.