ரூ.3.70 லட்சம் மதிப்பில் மதுபானங்கள் அழிப்பு
விருதுநகர், ஜூன் 23- சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டு போலீ சாரால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.3.7 லட்சம் மதிப்பி லான மதுபானங்கள் தரையில் ஊற்றி அழிக்கப்பட்டன. விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு துறையினரால் கடந்த மே மாதம் முழுவதும் சோதனை நடைபெற்றது. அப்போது, சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்ட 2783 மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. அவற்றை, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வளாக பகுதியில் கலால் உதவி ஆணையர் அமிர்தலிங்கம் தலைமையில் மதுவிலக்கு பிரிவு போலீசார் மது தரையில் ஊற்றி அழித்தனர்.
எரசை, போடிதாசன் பட்டியில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்
தேனி ,ஜூன்.23- கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு எரசை ,போடிதாசன்பட்டி ஆகிய கிராமங்களில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற உள்ள தாக மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா தெரி வித்துள்ளார் . இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக 2023-24-ஆம் ஆண்டிற்கு எரசக்கநாயக்கனூரில் ஜூன் 27 அன்றும் போடிதாசன்பட்டியில் ஜூன் 28 அன்றும் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்கள் நடைபெறவுள்ளது. மேற்படி முகாமில் கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், வெறிநாய் தடுப்பூசி, இராணிகட் நோயிற்கான தடுப்பூசி, மலடு நீக்கத்திற்கான தாது உப்புக்கலவை வழங்குதல், சிறிய அறுவை சிகிச்சை கள், செயற்கைமுறை கருவூட்டல், கரு பரிசோதனை, சாணம், இரத்தம் மற்றும் பால் பரிசோதனை செய்யப் படும்.
முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அலுவலரின் அலட்சியம்: மக்கள் அவதி
முதுகுளத்தூர், ஜூன் 23- இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அலுவலரின் அலட்சியத்தால் பொதுமக்கள் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதிலே பெரும் சிரமத்தில் உள்ளாவதாக தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் நலச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் ராஜேஷ் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து மாவட்டத் தலைவர் ராஜேஷ் கூறு கையில், முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவல கத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு பணி வழங்க வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்தும் அலுவல கங்கள் இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுப்ப தில்லை. 100 நாள் வேலையில் அதிகமாக மோசடி நடப்பதா கவும் அதற்கு மேல் மட்ட அதிகாரி துணை போ கின்றார். மாவட்ட நிர்வாகம் உடனே தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
தர்மசாஸ்தா கோயில் எறிகாசுசேகர உரிமம் ரூ.28 லட்சத்திற்கு ஏலம்
தேனி ,ஜூன்.23- ஆண்டிபட்டி அருகே கணவாயில் உள்ள தர்மசாஸ்தா கோயிலில் எறிகாசு சேகர உரிமம் ரூ.28 லட்சத்துக்கு ஏலம் போனது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி கணவாயில் உள்ள தர்ம சாஸ்தா கோயில் வழியாக வாகனங்களில் செல்வோர், தட்சணையாக காசுகளை சாலையில் வீசி விட்டு செல்வர். இந்த காசுகள் ஒவ்வொரு ஆண்டும் ஏலதாரர்கள் மூலம் சேகரிக்கப்பட்டு வருகிறது.நடப்பு ஆண்டுக்கான ஏலம் ஆண்டிபட்டி மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்றது. ஏலத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கலைவாணன் தலைமை வகித்தார். பெரிய குளம் சரக ஆய்வாளர் கார்த்திகேயன், கோயில் செயல் அலுவலர் ஹரிஷ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்த னர்.ஏலத்தில் கலந்து கொண்டவர்களில் உயர்ந்த ஏலத்தொகை கேட்ட பா. உதயபாண்டி என்பவருக்கு ரூ.28 லட்சத்துக்கு ஏலம் உறுதி செய்யப்பட்டது.
திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
திண்டுக்கல். ஜுன்.23- திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி வீட்டில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் ஜூன் 23 அன்று சோதனை நடத்தினர். திண்டுக்கல் மாநகராட்சி ஆணைய ராக கடந்த மே மாதம் மகேஸ்வரி பொ றுப்பேற்றுக்கொண்டார். இவர் இதற்கு முன்பாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தஞ்சா வூர் உள்ளிட்ட பல மாநகராட்சிகளில் ஆணையராக பணியாற்றியிருக்கிறார். இவர் ஏற்கனவே பணியாற்றிய மாநகராட்சி களில் திட்டப்பணிகளுக்கு கூடுதலாக கமிசன் கேட்டதாக கூறப்படுகிறது. காஞ்சிபுரம் மாநகராட்சியில் கடந்த 2020-21 ஆம் நிதியாண்டில் கொரோனா காலத்தில் சுகாதாரப்பிரிவில் லைசால் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்தது தொடர்பாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக சுகாதாரப்பிரிவு ஊழியர்கள் இருவரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையிட்டனர். அதே போல் இளநிலை உதவியாளர் சந்த வள்ளி என்பவரது வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையிட்டனர். அந்த புகாரின் அடிப்படையில் தற்போது திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரியின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி. நாகராஜ், ஆய்வாளர் அண்ணாதுரை தலைமையில் ஆறு பேர் கொண்ட குழு காலை 7 மணி முதல் சோதனை மேற்கொண்டனர். அதே போல களக்காட்டுரில் சுகாதார ஆய்வாளர் ரமேஷ் வீட்டிலும் டி.எஸ்.பி. கலைச்செல்வன் தலைமையில் ஆய்வாளர் கீதா உள்ளிட்ட 6 பேர் கொண்ட குழு ஆய்வு மேற்கொண்டனர். (நநி)
வரிச்சியூர் செல்வத்தை காவலில் எடுக்க மனு
விருதுநகர், ஜூன்.23- மதுரையின் பிரபல ரௌடியான வரிச்சியூர் செல்வம் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில், இவரது கூட்டாளியான விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்த செந்தில் குமார் கடந்த 2021ம் ஆண்டு மாயமானார். இதுகுறித்து அவரது மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் விசாரணை நடத்திய காவல்துறையினர், வரிச்சியூர் செல்வத்தின் தூண்டு தலின் பேரில் அவரது கூட்டாளிகள் செந்தில்குமாரை சென்னைக்கு கடத்திச் சென்று, துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தது தெரிய வந்தது. எனவே காவல்துறையினர், ரவுடி வரிச்சூர் செல்வத்தை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில், அவரை காவலில் எடுத்து விசாரிக்க விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் காவல்துறையினர் மனுத்தாக்கல் செய்தனர். அம்மனுவை விசாரித்த நீதித்துறை நடுவர் கவிதா, வரிச்சியூர் செல்வத்தை திங்களன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.
வீடு புகுந்து நகை பறித்த 2 பேருக்கு 7 ஆண்டு சிறை
தேனி, ஜூன் 23- தேனி மாவட்டம், அழகர்நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் தம்பதி சுதர்சன், சத்தியபாமா. கடந்த 2018, ஏப்ரல் 6 ஆம் தேதி சுதர்சன், சத்தியபாமா ஆகியோர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.அப்போது, 2 மர்ம நபர்கள் வீடு புகுந்து சத்தியபாமா அணிந்திருந்த நாலரை பவுன் தங்கச் சங்கிலை பறித்துள்ளனர். அப்போது விழித்துக் கொண்ட சுதர்சன், அவர்களை தடுக்க முயன்ற போது அவரை கத்தியால் கையில் குத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தேவாரம் காவல் நிலையத்தில் சத்தியபாமா புகார் அளித்தார். இந்தப் புகாரின் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்திய தேவாரம் காவல்துறையினர், , நகை பறிப்பில் ஈடுபட்ட ராசிங்காபுரம், மேலப்பேட்டையைச் சேர்ந்த தாதப்பன் மகன் குமார்(28), குளத்துப்பட்டியைச் சேர்ந்த தவமணி மகன் சரவணன்(25) ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி வி.சுரேஷ், வீடு புகுந்து நகை பறிப்பில் ஈடுபட்ட குமார், சரவணன் ஆகியோருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா ரூ.2,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.