பாட்னா, ஜுன் 1 - மதுபானம் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கும் புதிய சட்டத் திருத்தத்திற்கு பீகார் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. புதிய சட்டத்தின்படி அபராதத் தொகையானது வாகனத்தின் காப்பீட்டுத் தொகையில் 10% ஆக இருக்கும். அதாவது அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை அபராதமாக விதிக்கப்பட உள்ளது. மதுவிலக்கு சட்டம் கொண்டுள்ள பீகார் மாநிலத்தில் மதுபானம் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு முன்பு காப்பீட்டுத் தொகையில் 50%க்கு அளவில் அபராதம் விதிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.