districts

img

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் லயன்ஸ் பள்ளி மாணவர் சாதனை

திருவில்லிபுத்தூர், டிச.12-  தூத்துக்குடியில் மதர் தெரசா பொறியியல் கல்லூரி யில் வைத்து 30 – ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல்  மாநாடு நடைபெற்றது. இம் மாநாட்டில் மாவட்ட அளவில் தகுதி பெற்ற 545 மாணவர்களின் 30 கண்டுபிடிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டன. இதில் திருவில்லிபுத்தூர் லயன்ஸ் பதின்ம மேல் நிலைப்பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவர் ஏ.செழியன் கண்டுபிடிப்பு தேசிய அள வில் நடைபெற இருக்கும் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. செழியன் அகமதாபாத், நடைபெற இருக்கும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கும் தகுதி பெற் றுள்ளார். இஸ்ரோவில் நடைபெறும் ஆராய்ச்சிக்கும் தகுதி பெற்றுள்ளார் சாதனை படைத்த மாணவர் செழி யனை லயன்ஸ் பள்ளி தாளாளர் ஆர். வெங்கடாசலபதி, பள்ளி முதல்வர் எம்.பி. முருகன், துணை முதல்வர் பி.ஜெய ராமகிருஷ்ணன், பள்ளி நிர்வாகத்தினர், பெற்றோர் ஆசி ரியர் சங்கத்தினர், மாணவர்கள் பாராட்டினர்.