districts

இளம்பெண்ணை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

மதுரை, ஜூன் 9- மதுரையில் காதலிக்க மறுத்த இளம்  பெண்ணை கொலை செய்த இளைஞருக்கு  ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்தவர் மீனா. இவரது  கணவர் உயிரிழந்த நிலையில் தனது இரு குழந்தைகளுடன் வாழ்ந்துவந்துள்ளார். இதனையடுத்து தனது மகன் ஈஸ்வரனை உறவினர் வீட்டிற்கு மீனா அனுப்பிவைத்துள்ளார்.  இந்நிலையில் உறவினரின் வீட்டில் தங்கி யிருந்த ஈஸ்வரன் தனது உறவினரின் மக ளான நர்சிங் மாணவி ரேவதி என்பவரை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்கு ரேவதி காதலிக்க மறுத்ததோடு வெளிநாட்டிற்கு சென்று வேலை பார்க்க  வேண்டும், உயர் படிப்பு படிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.   இதனையடுத்து கடந்த 2005ஆம் ஆண்டு வீட்டில் யாரும் இல்லாதபோது ரேவதியின்  வீட்டிற்குச் சென்ற ஈஸ்வரன், தான் மறைத்து  வைத்திருந்த கத்தியால் ரேவதியை குத்திக்  கொலை செய்துவிட்டார். இதில் சம்பவ இடத்திலேயே ரேவதி உயிரிழந்தார்.  உசி லம்பட்டி நகர்  காவல்துறையினர் ஈஸ்வ ரனை கைது செய்தனர் . இந்த வழக்கின் விசா ரணை மதுரை மாவட்ட மகிளா நீதிமன் றத்தில் நடைபெற்றது. நீதிபதி கிருபாகரன் மதுரம் புதனன்று அளித்த தீர்ப்பில், நர்சிங் மாணவியை கொலை செய்த ஈஸ்வரனுக்கு ஆயுள் தண்ட னையும்,  3ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்  தும் தீர்ப்பளித்தார்.

;