districts

img

தந்தையரை போற்றுவோம்!

உலகெங்கிலும் உள்ள தந்தையர்களை கௌரவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை தந்தையர் தினமாக கொண்டாடப்படுகிறது. தந்தையின் அன்பு, உழைப்பு, அர்ப்பணிப்பை நினைவுகூர்ந்து பாராட்டி அவர்களுக்கு அன்பு செலுத்தவே தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. தந்தையர் தினம் உருவாகக் காரணமாக இருந்தவர் ஒரு பெண்மணி. மனைவியை இழந்த தன்னுடைய தந்தையின் அரவணைப்பை போற்றும் வகையில் அந்த பெண், தந்தையர் தின கொண்டாட்டத்தை முன்மொழிந்தார். அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள ஸ்போகேனில் வசித்து வந்த அமெரிக்க உள்நாட்டுப் போர் வீரர் வில்லியம் ஜாக்சன் ஸ்மார்ட்டின் மகள் சோனோரா என்ற பெண் தான் தந்தையர் தினம் உருவாக காரணமாக இருந்தார். சோனோராவின் தாய் தனது ஆறாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் போது இறந்தார், அதன் பிறகு சோனோராவை அவரது மூத்த சகோதரர்களுடன் சேர்த்து அவரது தந்தை பிரியத்துடன் வளர்த்தார்.  ஒருநாள், அன்னையர் தினத்தைப் பற்றிய ஒரு சொற்பொழிவை சோனோரா தேவாலயத்தில் கேட்டுக் கொண்டிருந்தபோது, தந்தையின் பாத்திரத்திற்கும் அங்கீகாரம் தேவை என்று உணர்ந்தார். தாய் இல்லாத ஆறு குழந்தைகளை வளர்த்தெடுத்த தன் தந்தைக்கு அன்பு செலுத்த வேண்டும் என்ற காரணத்தால், தந்தையர் தின கொண்டாட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். அவர் அரசாங்கத்திடம் தனது தந்தை ஸ்மார்ட்டின் பிறந்தநாளான ஜூன் 5-ஆம் தேதியை தந்தையர் தினமாக உலகெங்கிலும் உள்ள அப்பாக்களை மதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கைக்கு முதலில் ஒப்புதல் கிடைக்கவில்லை, இருப்பினும் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையை தந்தையர் தினமாகக் கொண்டாட முடிவு செய்தனர். அதைத் தொடர்ந்து, 1966- ஆம் ஆண்டில், அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி லிண்டன் பி ஜான்சன் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினமாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து பிரகடனத்தில் கையெழுத்திட்டார். பணக்கஷ்டமும், மனக்கஷ்டமும் தனக்கு இருந்தாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல் குடும்பத்தின் சந்தோஷத்துக்காக சுகமாக சுமந்து கொண்டிருப்பார் தந்தை. அதனால் தந்தையரைப் போற்றுவோம்.