districts

img

மதுரையில் சிலைகள் விற்பனை மையம் திறப்பு

ஒன்றிய அரசு புறக்கணிக்கின்ற தலைவர்களின் சிலைகள் நமது வீடுகளை அலங்கரிக்கட்டும்

இந்நிகழ்ச்சியில் சு. வெங்கடேசன் எம்.பி.பேசுகையில்,  “மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டிற்கு வரு கின்ற தலைவர்களுக்கு ஒரு சிறப்பான நினைவு பரிசை கொடுக்க வேண்டும் என்று  நினைத்தோம். அப்போது கீழடி ஆய்வு குறித்த வரலாற்று நூலை வருகின்ற தலை வர்களுக்கு அவர்களுடைய தாய் மொழி யில் வழங்குவது என்றும் இரண்டாவதாக  மாமேதை மார்க்ஸ்  சிலையினை வழங்க  வேண்டும் என்று நினைத்தோம். அப்போது  சென்னையில் உள்ள அருணை தொடர்பு  கொண்டு பேசிய போது மாமேதை மார்க்ஸ்  அவர்களின் மார்பளவு சிலையை தத்ரூப மாக வடிவமைத்து கொடுத்தார். தற்போது  தீக்கதிர் அலுவலக முகப்பில் அந்த சிலை  வைக்கப்பட்டுள்ளது. அந்த  சிலையினை கொடுப்பதற்கு மனமே இல்லாமல் சென் னையில் அவருடைய வாகனத்தில் வைத்து சுற்றிக் கொண்டிருந்தார். அப்படி மிகவும் நேர்த்தியான முறையில் தலைவர்களின்  உருவத்தை செய்து கொடுக்கக்கூடிய ஒரு  நிறுவனம் இன்றைக்கு தென் மாவட்டங்க ளுக்கு கிடைத்த ஒரு வாய்ப்பாக மதுரை யில் அமைந்துள்ளது. எனவே இதை  பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களுடைய தலைவர்களின் சிலையை செய்வதற்கு நிச்சயம் உங்களை நாடு வார்கள்.  யாருடைய சிலைகளை எல்லாம் ஒன்  றிய அரசு புறக்கணிக்கின்றதோ அவர்களு டைய சிலைகள் எல்லாம் நம்முடைய வீடு களை அலங்கரிக்கட்டும். அந்த வகையில் சிலைகள் நிறுவனம் மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்களை நான் தெரி வித்துக் கொள்கிறேன்”  என்று கூறினார். சிலைகள் பெற அழைக்க - 86828 20452.

மதுரை, ஜன.18-  சென்னையில் செயல்பட்டு வரும்  சிலை கள் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் உலகத் தலைவர்கள் மற்றும் இந்தியாவின் சுதந்திரப் போராட்ட தலைவர்களின் சிலை களை தத்ரூபமாக வடிவமைத்து விற்பனை செய்து வருகின்றது.  இந்நிறுவனத்தின் கிளை மதுரை பழங்காநத்தம்  பசும்பொன் நகரில் துவங்  கப்பட்டுள்ளது.இந்த சிலைகள் நிறு வனத்தின் புதிய கிளை திறப்பு விழா  மதுரை  காளவாசல்  அருகில் உள்ள தனியார் உண வகத்தில் ஜனவரி 18 அன்று நடைபெற்றது. மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்க டேசன் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை  மாநகர் மாவட்ட செயலாளர் மா. கணேசன்,  புறநகர் மாவட்ட செயலாளர் கே. ராஜேந்தி ரன், மாநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்  ஜா.நரசிம்மன், மேற்கு - 1ஆம் பகுதி குழு  செயலாளர் கு. கணேசன், திமுக 72 வது  வார்டு மாமன்ற உறுப்பினர் எஸ். வி. சுதன்,  74 வது வார்டு செயலாளர் ஆர். சௌந்தர ராஜன், சம்பட்டிபுரம் பகுதி செயலாளர் கே.  தவமணி  அதிமுக - 4 ஆம் பகுதி செயலாளர்  எம். முத்துவேல், சிலைகள் நிறுவன தலை வர் ஆர். அருண் டைட்டன் மற்றும் இணை நிறுவனர் சௌமியா அருண், நிறுவன உரி மையாளர்கள் யோகேஸ்மூர்த்தி, பாபு கெவின், மதுரை காமாட்சி பில்டர்ஸ் உரிமை யாளர் கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.