கள்ளிக்குடி, (மதுரை) ஜூலை 18- மதுரையிலிருந்து சுமார் 40 கி.மீ. தொலை வில் உள்ளது குராயூர். இந்த ஊராட்சியில் 5-ஆவது வார்டு உறுப்பினராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார் பிலாவடிக்குமார். இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பி னர். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இவரது பகுதி யில் இதுவரை எந்தப் பணியும் நடைபெற வில்லை. ஆனால், இதுவரை ஊராட்சியின் சார்பில் ஒரு கோடி ரூபாய்க்கு பணிகள் நடை பெற்றுள்ளதாகக் கூறும் இவர், பட்டியலின மக்கள் புறக்கணிக்கப்படுவதாக குற்றம் சாட்டு கிறார். காரணம் கேட்டபோது “எல்லாம்... அது தான்” என மிகச் சாதாரணமாகக் கூறினார். இந்த ஊராட்சியில் கழிவு நீர் வாய்க்கால் களை சுத்தம் செய்யும் பணியிலும், குப்பை சேக ரிக்கும் பணியிலும் அருந்ததியர் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். கழிவுநீர் வாய்க்கால்களை சுத்தப் படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு மாதம் ரூ.7 ஆயிரம் தான் ஊதியம் தரப்படு கிறது. அதுவும் கடந்த மூன்று மாதங்களாக வழங்கப்படவில்லை. குப்பை சேகரிக்கும் தொழிலாளர்களுக்கு ரூ.3,600 தான் சம்பளமாக நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. இவர்களுக்கு மே மாத சம்பளம் இன்னும் வழங்கவில்லை. இப்பிரச்சனை உடனடியாக கள்ளிக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் கவனத்திற்கும், மதுரை ஆட்சியரின் கவனத்திற்கும் வாட்ஸ்-ஆப் மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உடன் நடவடிக்கை எடுப்பாரா ஆட்சியர்?