நேஷனல் ஹெரால்டு பொய் வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியாகாந்தி, ராகுல்காந்தி காந்தி ஆகியோரை பழிவாங்கும் நோக்கில், அமலாக்கத்துறை நடத்தும் விசாரணையை கண்டித்தும், பா.ஜ.க மோடி அரசின், அடக்குமுறையைக் கண்டித்தும் காங்கிரஸ் கட்சி சார்பில் இராமநாதபுரம் அரண்மனை முன்பாக இராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் வேலுச்சாமி தலைமையில்,ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்லத்துரை அப்துல்லா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மலேசியா பாண்டியன், மாநில பொதுச் செயலாளர் ரமேஷ் பாபு, மாவட்ட பொருளாளரும் நகர மன்ற உறுப்பினருமான இராஜாராம் பாண்டியன், இராமநாதபுரம் நகர் தலைவர் கோபி, கவுன்சிலர் மணிகண்டன் ஆகியோர் பங்கேற்றனர்.