districts

புதிய பாலத்தின் அருகில் தார்ச்சாலை அமைத்திடுக

உதகை, டிச.10- ஊட்டி -குன்னூர் தேசிய நெடுஞ்சா லையில் புதிய பாலத்தின் அருகாமை சாலைகள் மேடு, பள்ளமாக உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டி உள்ள னர். நீலகிரி மாவட்டம் உதகைக்கு கர்நாடகா, கேரளா மாநிலங்களில் இருந்து கூடலூர் மற்றும் கோவை வழியாக  தமிழகத்தின் மற்ற மாவட்டங் களில் இருந்து குன்னூர், கோத்தகிரி சாலை வழியாகவும் வாகனங்கள் சென்று வருகின்றன. இதில் ஊட்டி, குன்னூர், மேட்டுப்பாளையம் சாலை கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தாக கருதப்படுகிறது. குறிப்பாக, சீசன் காலங்களில் ஆயிரக்கணக்கான வாக னங்கள் படையெடுத்து வருவதால், குன்னூர் சாலை ஒருவழி பாதையாக மாற்ற வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதைத்தொடர்ந்து விபத்து ஏற்படு வதை தவிர்க்கவும், மற்ற சாலை களில் தடை ஏற்பட்டால் முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக இருக்கும் வகையிலும் ஊட்டி- குன்னூர்- மேட்டுப் பாளையம் சாலையை அகலப்படுத் தும் பணிகள் நடந்து வருகிறது. இதன்படி, ரூ.62 கோடியில் 10 மீட்டர் அகலத்திற்கு விரிவாக்கம் செய்யும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.

சமவெளி பகுதியில் போல அனைத்து இடங்களும் ஒரே மாதிரி அகலப் படுத்த முடிவதில்லை. எங்கெல்லாம் இடம் உள்ளதோ அங்கு எல்லாம் அக லப்படுத்தி வருகிறார்கள்.  இதன் ஒரு பகுதியாக ஊட்டியி லிருந்து குன்னூர் வரை சிறு பாலங் கள் கட்டப்பட்டன. இந்த பாலங்களின் அருகாமை பகுதி  உள்ள மேடு வேகத் தடைகள் போல் காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக தினசரி செல் லும் ஆயிரக்கணக்கான வாகனங் களும் சிரமத்திற்கு உள்ளகின்றன. ஊட் டியில் இருந்து குன்னூர் வரை சுமார் 70 இடங்களில் இப்பாலங்கள் கட்டப்பட் டுள்ளன. இப்பகுதிகளில் வேகத்த டைகள் மற்றும் பள்ளங்களாக இருக்கி றது.  பாலம் கட்டி முடிந்த பின் அதன் மீது முறையான தார்ச்சாலை அமைக் கப்படவில்லை. இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.  இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரி கூறுகையில், 100 ஆண்டு களுக்கு முன்பு ஆங்கிலேயர்கள் உரு வாக்கப்பட்ட பாரம்பரியமிக்க இந்த வழித்தடம் கால மாற்றத்திற்கு ஏற்ப  தற்போது விரிவாக்கம் செய்யப்படு கிறது. தற்போது பாலம் கட்டும் பணிகள் தீவிரமாக நடப்பதால் இதில் கவனம் செலுத்த முடியவில்லை, ஆனாலும் டிசம்பர் மாத இறுதிக்குள் பாலம் கட்டும் பணிகளும், அதன் மேல் புறமும் தார்ச் சாலை அமைக்கப்படும். இது சம்பந்த மாக மாவட்ட ஆட்சியர் அலுவல கத்திற்கும் தகவல் அனுப்பப்பட் டுள்ளது என்றார்.