districts

மதுரை முக்கிய செய்திகள்

செவ்வந்தி பூக்கள்  விலை உயர்வு

திண்டுக்கல்,  நவ.19 கார்த்திகை மாத கோவில திருவிழாக்களை முன்னிட்டு திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் செவ்வந்தி பூக்கள் விலை கடுமையாக உயர்ந்தது.  திண்டுக்கல்லில் விளையும் பூக்கள் மண்ணின் தரம் காரணமாக உடனடியாக கெட்டுப் போவதில்லை. தொடர் மழை காரணமாக பூக்கள் வரத்து குறைந்துள் ளது.  கார்த்திகை மாதம் முழுவதும் பூக்களுக்கு நல்ல கிராக்கி இருக்கும்.  அந்த அடிப்படையில் செவ்வந்தி பூவுக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளது  இது குறித்து விவசாயி தங்கம் கூறுகையில்,  ஒரு கிலோ செவ்வந்திப் பூ 70 ரூபாய் முதல் நூறு ரூபாய் வரை விலை உயர்ந்து விற்கப்படுகிறது  கடந்த வாரம் வரை ரூபாய் 40க்கு விலை போன செவ்வந்தி பூ தற்போது 70 முதல் 80 வரை விற்கப்படுகிறது. இந்த மாதம் முழுவதும் பூக்களின் விலை நேர்முகமாக இருக்கும்.  கிட்டத்தட்ட ரூபாய் 150 வரை கிலோவுக்கு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இதனால் செவ்வந்தி பூ உற்பத்தி செய்த விவசாயிகள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ள னர் என்றார். (நநி)

தபால் நிலையத்தில் திருட்டு

அருப்புக்கோட்டை, நவ.19- அருப்புக்கோட்டை சொக்க லிங்கபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வனிதா(35) இவர் பாளையம்பட்டி தபால் நிலை யத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த17ஆம் தேதி  முகக்கவசத் துடன் தபால் நிலையத்திற் குள்  ஒரு ஆணும் ,  பெண்ணும் புகுந்து வனிதாவிடம் பேச்சுக் கொடுத்துள்ளார். அப்போது, அந்த ஆண் நபர்,  கதவைத் திறந்து அலுவலகத்தின் உள்ளே நுழைந்துள்ளார். வனிதாவும், தபால் நிலைய ஊழியர் கோபால கிருஷ்ணனும் சத்தம் போட்டுள்ள னர். பின்பு, மர்மநபர்கள் இருவரும் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதனால், சந்தேகமடைந்த வனிதா, அலுவலக  மேiஜையை திறந்து பார்த்தபோது, அதன் உள்ளே யிருந்த ரூ.84ஆயிரம் திருடு போனது தெரிய வந்தது. போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்ற னர்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்த நாள்

விருதுநகர், நவ.19- விருதுநகரில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் 105 வது பிறந்த தினத்தை காங்கிரசார் கொண்டாடினர். விருதுநகரில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள் எம்.மீனாட்சிசுந்தரம், நகரத் தலைவர் நாகேந்திரன், நகர்மன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

வேன் மோதி ஒருவர் பலி

தேனி ,நவ.19- தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள எ.புதுப்பட்டியைச் சேர்ந்தவர் சீனி மகன் தினகரன் (30). இவர் தனியார் மில்லில் பேருந்து ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார். வெள்ளிக்கிழமை இரவு மதுரை சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த  மற்றொரு இருசக்கர வாகனத்தின் மீது மோதினார். இதில் தினகரன் படுகாயமடைந்து 108 ஆம்பு லன்ஸ் மூலம் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மதுரை ரயில் நிலையத்தில் மீன்கள் சிலையை மீண்டும் வைக்கக் கோரி வழக்கு

மதுரை, நவ. 19- மதுரை  ரயில் நிலையத்தின் முன்பு வைக்கப்பட்டி ருந்த 3 மீன்கள் கொண்ட சிலையை மீண்டும் அவ்விடத்தில் வைக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதுகுறித்து இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தீரன் திருமுருகன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், மதுரையை சங்க காலத்தில் ஆண்ட பாண்டிய மன்னனின் சின்னமாக மீன்கள் இருந்தது அதன் நினை வாக மதுரை ரயில் நிலையத்தின் வெளியே 1999 ஆம்  ஆண்டு 3 மீன்கள் கொண்ட சிலை 15 அடி உயரம் 3 டன்கள் எடையில் அமைந்திருந்தது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக மதுரை ரயில் நிலையத்தை புதுப்பித்து சீரமைப்பதற்காக மீன் சிலைகள் அகற்றப் பட்டது. அதன் பின்பு தேசியக்கொடி கம்பங்கள் அனைத்தும் பொருத்தப்பட்டு வேலைகள் முடிவடைந்தது இருந்தும் மீன்கள் சிலை வைக்கப்படவில்லை. பின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடே சனின் ன் முயற்சியால் நவம்பர் 2021 ஆம் ஆண்டு ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்து மீன் சிலை மீண்டும் வைப்பதற் கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை மீன்கள் சிலை மதுரை ரயில் நிலையம் முன்பு வைக்கப்படவில்லை.3 மீன்கள் கொண்ட சிலையை மீண்டும் அவ்விடத்தில் வைக்க உத்தரவிட வேண்டும் என்று  கூறியிருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு வெள்ளியன்று நடைபெற்றது. அப்போது நீதிபதிகள்,  வழக்கு குறித்து தமிழ்நாடு பொதுப்பணித்துறை செயலர், மதுரை மாவட்ட ஆட்சி யர், மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் ஆகியோர் பதில ளிக்க உத்தரவிட்டனர். வழக்கு விசாரணை 2 வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

போடி அரசு பொறியியல் கல்லூரியில் வாழ்க்கை திறன் பயிற்சி

தேனி , நவ. 18- போடி அரசு பொறியியல் கல்லூரியில் வெள்ளிக் கிழமை வாழ்க்கை திறன் பயிற்சி மற்றும் எய்ட்ஸ் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. போடி அரசு பொறியியல் கல்லூரி இளைஞர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு திட்டம் சார்பில்  வாழ்க்கை திறன் பயிற்சி ,எய்ட்ஸ் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி கருத்தரங்கில் நடை பெற்றது. இயற்பியல் துறை உதவி பேராசிரியரும் இளைஞர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளருமான அ.குபேர ராஜா தலைமை வகித்தார். மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு திட்ட மேலாளர் எஸ்.முகமது பரூக், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆற்றுப்படுத்துனர் ராஜா ஆகியோர் வாழ்க்கை திறன் மேம்பாடு குறித்தும், எய்ட்ஸ் உள்ளிட்ட நோய்கள் தடுப்பு குறித்தும் விளக்கினர். நிகழ்ச்சியில் முதலாமாண்டு மாணவர்கள் பங்கேற்றனர். போடி அரசு மருத்துவமனை ஆற்றுப்படுத்துனர் பாண்டி நன்றி கூறினார்.

இராமநாதபுரத்தில் குடும்ப நிலவரங்கள் தொடர் கணக்கெடுப்பு  மக்கள் ஒத்துழைப்பு நல்க ஆட்சியர் வேண்டுகோள்

இராமநாதபுரம்,நவ.19- இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்  கூறிய தாவது: தமிழ்நாட்டின் குடும்ப நிலவரங்களின் தொடர் கணக்கெடுப்பு  சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் அமெரிக்காவில் உள்ள மிக்சிகன் பல்கலைக் கழகம்   ஆராய்ச்சி நிறுவனங்களின் வழிகாட்டுதலின்படி குடும்பங்களின்  வருமானம், தொழில், வேலைவாய்ப்பு கல்வி, மருத்துவம் ஆகிய கட்டமைப்பில் ஏற்படும் மாற்றங்களை ஆய்வு மேற்கொள்வதற்காக வடி வமைக்கப்பட்ட கணக்கெடுப்பு தமிழ்நாடு - பொருளியல் மற்றும் புள்ளிஇயல் துறையின் களப்பணியாளர்கள் மற்றும் அலுவலர்களால் கையடக்கக்கணினி மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இக்கணக்கெடுப்பானது, இராமநாதபுரம் மாவட்டத்தில் கிராமப்புறத்தில் 17 மாதிரிகளில் 252 வீடுகளி லும் மற்றும் நகர்புறத்தில் 19 மாதிரிகளில் 247 வீடுகளிலும் கையடக்கக்கணினி மூலம் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.  பொதுமக்கள் தங்கள் குடும்பங்கள் தொடர்பான உண்மையான புள்ளி விவரங்கள் அளித்து, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தகுந்த ஒத்துழைப்பு நல்குமாறும், பொது  மக்களால் கொடுக்கப்படும் புள்ளி விவரங்கள் யாவும் மிகவும் இரகசியமாக பாதுகாக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். மேற்படி விவரங்களின் அடிப்படையில் தமிழக அரசு, தமிழக மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான கொள்கை முடிவுகளையும், திட்டங்களையும் மேற்கொள்ள உள்ளதால் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை களப்பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் தங்கள் குடும்பங்கள் தொடர்பான புள்ளி விவரங்களை சேகரிக்க அணுகும் போது உரிய ஒத்துழைப்பு நல்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

உயர்நீதிமன்ற உத்தரவின்படி சித்தரேவு கோவிலுக்குள் அருந்ததிய மக்கள் நுழைந்து வழிபட்டனர்

திண்டுக்கல், நவ.19- உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவுப்படி  பழனி உச்சிகாளி யம்மன் கோவிலுக்குள் பட்டியலின மக்கள் அனுமதிக்கப்பட்டு சாமி கும்பிட்டனர்.  திண்டுக்கல் மாவட்டம் சித்தரேவு கிராமத்தில் வசித்து வருபவர் மணி. இவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில்,  சித்தரேவு கிராமத்தில்  உள்ள உச்சி காளியம்மன் கோவில் மற்றும் செல்வ விநாயகர் கோவிலில் பொது மக்கள் சென்று வழிபடுவது வழக்கம். கடந்த பத்து வருடகாலமாக  பட்டியலின மக்களை கோவிலிற்குள் சென்று வழிபடவிடாமல் ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தீண்டாமை கடைப்பிடிப்பதாகவுகம், இதனை எதிர்த்தும் கோவிலுக்குள்  அனுமதி கோரியும்,தீண்டா மையை கடைபிடிப்பவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியி ருந்தார்.  மனுவை விசாரித்த நீதிபதிகள், அமர்வு கடவுள் அனைவ ருக்கும் பொதுவானவர். எனவே கடவுளை வழிபட எந்த ஒரு பாகு பாடும் பார்க்கக்கூடாது என்று கூறினர். இது போன்று அரசியல் சாசனத்தை மீறுவோர் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மேலும் பட்டியலின மக்கள்  செல்வ விநாயகர் மற்றும் உச்சிகாளியம்மன் கோவிலில் சென்று வழிபடலாம் என்று என்று உத்தரவிட்டனர்.  இந்நிலையில் செவ்வயான்று உச்சிகாளியம்மன் கோவிலுக் குள் நீதிமன்ற உத்தரவின் படி பட்டியலின  மக்கள் நுழைய முயன்றனர். இதனையடுத்து அப்பகுதி ஆதிக்க சமூகத்தினர் பட்டியலின மக்களை அனுமதிக்க முடியாது என்று மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர் வருவாய்த்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் எச்சரித்த பிறகு பட்டியலின  மக்கள் அனுமதிக்கப்பட்டனர்.  இதுகுறித்து சிபிஎம் மாவட்டச்செயற்குழு உறுப்பினர் கமலக் கண்ணன் கூறுகையில், அருந்ததியர் மற்றும் தலித் மக்களை கோவி லுக்குள் நுழைய விடமாட்டோம் என்று  சாதி ஆதிக்க சமூகத்தினர் தடுப்பது கண்டனத்திற்குரியது. எனவே அருந்ததிய மக்களை  கோவிலுக்குள் நுழைய அனுமதிக்க வேண்டும் என்றார்.  இது  தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் மணிகண்டன் கூறுகையில்,   2013ம்ஆண்டு முதல் பட்டியலின மக்கள் ஆலய நுழைவுக்காக தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.  2017 கோவில் பூட்டப்பட்டது. எங்கள் கட்சி யின் ஆலோசனைபடி தோழர் மணி வழக்கு தொடர்ந்தார்.  உயர்நீதி மன்றம் நீதியின் பக்கம் நின்று பட்டியலின மக்களை ஆலயத்திற்கு  அனுமதிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது என்றார்.  கோட்டாட்சியர், தாசில்தார். மாவட்டக் காவல்துறைக் கண்கா ணிப்பாளர் பாஸ்கரன் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை யையடுத்து அருந்ததிய மக்கள் சாமியை தரிசிக்க அனுமதித்தனர். 

அங்கன்வாடி ஊழியர்கள் கூட்டம்

இராமநாதபுரம், நவ.19- அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தின் திருப்புல்லாணி வட்டாரக் குழு அமைப்புக் கூட்டம் சனிக்கிழமை உமா  தலைமையில் நடை பெற்றது. சிஐடியு மாவட்டச் செயலாளர் எம்.சிவாஜி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எம்.முருகேஸ்வரி, அங்கன்வாடி ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் சாந்தி, மாவட்டச் செயலாளர் மல்லிகா, மாவட்டத் தலைவர் உமா, ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் திருப்புல்லாணி வட்டார அனைத்து அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் கலந்து கொண்டனர். வட்டாரத் தலைவராக உமா, செய லாளராக மஞ்சுளா தேவி, பொருளா ளராக சாந்தினி உட்பட உதவித் தலைவர், உதவிச் செயலாளர் என 20 நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.    அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களின் கோரிக்கையை திட்ட அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு  மனு வாக அளிப்பது என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

சாலை விபத்தில் ஓட்டுநர் பலி

அருப்புக்கோட்டை, நவ.19- விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கஞ்சநாயக்கன் பட்டியைச் சேர்ந்தவர் மகே ஸ்வரன் (39). இவர் சாத்தூர் சுங்கச் சாவடியில் உள்ள ஆம்புலன்ஸ் ஓட்டுநராகப் பணிபுரிந்தார். சம்பவத் தன்று இருசக்கர வாக னத்தில் ஆர்.ஆர்.நகர் பகு தியில்  மகேஸ்வரன் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது  அவரது இரு சக்கர வாகனம் விபத்துக் குள்ளானது. இதில் படுகாய மடைந்த மகேஸ்வரன் சிகிச்சை பலனின்றி உயி ரிழந்தார்.

டாஸ்மாக் கடைகளில் வசூல் வேட்டை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

சிவகங்கை, நவ. 19- சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 139 டாஸ்மாக் கடைகளில் மாதம்தோறும் ரூ. 2000 முதல் ரூ. 5000 வரை கெடுபிடி வசூல் செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிவகங்கை மாவட்ட டாஸ்மாக் தொழிலாளர் சங்கம் (சிஐடியு) லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் அளித்துள்ளது. சிவகங்கை மாவட்டத் தலைவர் திரு மாறன், மாவட்டச் செயலாளர் குமார், மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் முருகன், மாவட்டத் துணை தலைவர் மெய்யப்பன் ஆகியோர் மாவட்ட நிர்வா கத்திற்கும், லஞ்ச ஒழிப்பு துறைக்கும்  அளித்துள்ள புகார் மனுவில், “ சிவகங்கை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் 139 உள்ளது. இங்கு தொழிலாளர்கள் குறைந்தபட்ச ஊதியத்தில் பணியாற்றி வருகிறார்கள். இவர்களிடம் மாவட்ட அதிகாரிகளும் மண்டல அதிகாரிகளும் மாதந்தோறும் ரூ.2000 முதல் ரூ. 5000 வரை ஒவ்வொரு கடைக்காரரும் கொடுக்க வேண்டும் என்று நிர்ப்பந்தித்து வசூல் செய்கிறார்கள். இதைத் தடுக்க வலியுறுத்தி பலமுறை புகார் செய்துள் ளோம்.  இதைத் தடுப்பதற்கு உயர் அதிகா ரிகள் தலையிட வேண்டும். லஞ்ச ஒழிப்புத் துறையும் இதில் கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரவித்துள்ளனர். தவிர பல்வேறு புகார்களையும் அவர்கள் மனுவில் கூறியுள்ளனர். 

தேனியில்  கூட்டுறவு வாரவிழா

தேனி, நவ.19- தேனியில் நடைபெற்ற  69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் 1204 பயனாளிகளுக்கு ரூ.10.80 கோடி மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீதரன் வழங்கினார். கூட்டுறவுத்துறையின் சார்பில்  69-ஆவது அனைத்திந்தியக் கூட்டுறவு  ஆட்சியர்  க.வீ.முரளீதரன்  தலைமையில் நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர்கள்  என்.இராமகிருஷ்ணன்(கம்பம்), ஆ.மகா ராஜன் (ஆண்டிபட்டி), கே.எஸ்.சரவணக்குமார் (பெரியகுளம்)  ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவில், சிறப்பாக செயல்பட்ட 25 கூட்டுறவுச்சங் கங்கள், பள்ளி மற்றும் கூட்டுறவு பட்டயப் பயிற்சி மாணவ, மாணவி யர்களிடையே நடைபெற்ற கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி மற்றும் ஓவியப் போட்டி களில் வெற்றி பெற்ற 18 மாணவ, மாணவிகள், கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள், 10, 11, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர் வில் அதிக மதிப்பெண் பெற்ற கூட்டுறவு பணியாளர்களின் குழந்தைகள் ஆகியோர்களை பாராட்டி கேடயங்கள், பாராட்டுச் சான்றிதழ்களையும், 1,204 பயனாளிகளுக்கு, ரூ.10.80 கோடி மதிப்பிலான கடனுதவிகளையும் மாவட்ட ஆட்சியர் க.வீ .முரளீதரன் வழங்கினார் . விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் தி.சுப்பிரமணியன், மதுரை மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநர்  அ.ஜீவா, கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் து.ஆரோக்கிய சுகுமார், தேனி-அல்லிநகரம் நக ராட்சி நகர் மன்றத் தலைவர் ரேணுப் பிரியா பாலமுருகன்,  தேனி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் பா.இராஜேஷ் கண்ணன், உள்ளாட்சி அமைப்பு களின் பிரதிநிதிகள், கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.