districts

img

சலவைத் தொழிலாளர்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கிடுக

மதுரை, ஜூன். 3- சிஐடியு மதுரை சலவை தொழிலாளர் சங்க 15 வது ஆண்டு பேரவை    சிஐடியு மாவட்டக்குழு  அலுவலகத் தில் ஆர். பெரியண்ணன் தலைமையில்  நடைபெற்றது .சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் சி. சுப்பையா துவக்கி வைத்து பேசினார். மாவட்ட நிர்வாகி எஸ். சந்தி யாகு வாழ்த்தி பேசினார்.  மாவட்ட பொதுச் செயலாளர் இரா. பாலு வேலை அறிக் கையும், பொருளாளர் கே. சத்திவேல் வரவு - செலவு அறிக்கையும் சமர்பித்தனர்.  சிஐடியு மாவட்டச் செயலா ளர் ஆர். தெய்வராஜ் நிறைவு ரையாற்றினார்.  பேரவையில் புதிய நிர்வா கிகள் தேர்வு செய்யப்பட்ட னர். தலைவராக கே. பரம சிவம், பொதுச் செயலாள ராக இரா. பாலு, பொருளாள ராக கே. சக்திவேல் உள் ளிட்ட 15 பேர் கொண்ட நிர்வா கக்குழு தேர்வு செய்யப் பட்டது. சலவை தொழிலாளர்க ளுக்கு  நலவாரியம் மூல மாக வழகப்படும் திருமண உதவித் தொகை ரூ. 25 ஆயி ரமாக உயர்த்தி வழங்கிட வேண்டும். 60 வயது பூர்த்தி அடைந்த ஆண் தொழி லாளர், 58 வயது நிறைவ டைந்த பெண் தொழிலாளர் ஆகியோருக்கு ரூ. 3 ஆயிரம் உதவித் தொகை நல வாரியம் மூலம் வழங்கிட வேண்டும். மதுரை சந்தைப் பேட்டை பகுதியில் 50 ஆண்டு களுக்கு மேலாக குடி யிருக்கும் சலவை தொழிலா ளர்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்ட வழங்கிட வேண்டும்.  பரவையில் இயங்கி  வரும் சலவை கூடத்திற்கு சுற்றுச் சுவர் அமைத்து பாது காப்பான சூழலை உரு வாக்க வேண்டும். தமிழ்நாடு நலவாரி யத்தின் மூலம் கடந்த காலங்களில் வழங்கியதைப் போன்று சலவைத் தொழி லாளர்களுக்கு இலவச தேய்ப்பு பெட்டி வழங்கிட வேண்டும், சாலையோரங்க ளில் துணிகளை தேக்கும் தொழிலாளர்களுக்கு மழை வெயில் காலங்களில் தொழில் செய்ய ஏதுவான பாதுகாப்புடன் கூடிய தேய்ப்பு வண்டிகள் வழங்கிட வேண்டும் என்று வலி யுறுத்தி தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.