தேனி, மார்ச் 13- பெரியகுளத்தில் சிஐடியு சார்பில் மறைந்த தலைவர் வி.பி.சிந்தன் பெய ரில் அரசு போட்டி தேர்வுகளில் பங்கேற் கும் வேலை நாடுபவர்களுக்கான இல வச வகுப்பு துவக்க விழா ஞாயிறன்று நடைபெற்றது. தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் நுழைவு தேர்வுகளுக்கு வேலை நாடுநர்களை தயார் செய்யும் வகையில், சிஐடியு சார்பில் பெரிய குளத்தில் உள்ள ஏ.பி. படிப்பக்கத்தில் வி.பி.சிந்தன் பெயரில் கோச்சிங் சென் டர் துவக்கப்பட்டது. துவக்கவிழா நிகழ்ச்சிக்கு சிஐடியு மாவட்டச் செயலாளர் எம்.இராமச் சந்திரன் தலைமை தாங்கினார். பயிற்சி வகுப்பை துவக்கி வைத்து பெரியகுளம் நகர்மன்ற தலைவர் சுமிதா பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்டச் செயலாளர் ஏ.வி. அண்ணாமலை, சிஐடியு மாவட்டத் தலைவர் சி.முருகன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.வெண்மணி, மார்க்சிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் எம்.வி.முருகன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். 13-ஆவது வார்டு சிபிஎம் நகர்மன்ற உறுப்பினர் எம்.மதன்குமார் நன்றி கூறி னார். வி.பி.சிந்தன் கோச்சிங் சென்டர் ஒருங்கிணைப்பாளர் ஜி.பரமேஸ்வரன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.அரசு வழக்கறிஞர் சிவக்குமார் உள்ளிட்ட பிர முகர்கள் கலந்து கொண்டனர்.