districts

img

திருவில்லிபுத்தூர் நகர திமுக சார்பில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்

திருவில்லிபுத்தூர் நகர திமுக சார்பில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நகரச் செயலாளர் வழக்கறிஞர் ஜி.ஜி.அய்யாவுபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் குமார், கொள்கை பரப்பு துணைச் செயலாளர் வேலூர் ரமேஷ், தலைமைக் கழக பேச்சாளர்கள் குளித்தலை இஸ்மாயில் கு வெங்கட்ராமன் ஆகியோர் உரையாற்றினர். ஒன்றிய பெருந்தலைவர் மற்றும் ஒன்றிய செயலாளர் மல்லி கு. ஆறுமுகம் நகர்மன்றத் துணைத் தலைவர் செல்வமணி பொதுக்குழு உறுப்பினர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.