districts

img

சட்டமன்றத்தில்  நிறைவேற்றப்பட்ட நில எடுப்பு ஒருங்கிணைப்பு சட்டத்தை தமிழ்நாடு  அரசு ரத்து செய்ய வேண்டும்.

சட்டமன்றத்தில்  நிறைவேற்றப்பட்ட நில எடுப்பு ஒருங்கிணைப்பு சட்டத்தை தமிழ்நாடு  அரசு ரத்து செய்ய வேண்டும்.இராமநாதபுரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் பயிர் காப்பீட்டுத்தொகை வழங்க வேண்டும். ரேசன் கடையில் வழங்கப்படும் அரிசியை ஆய்வு செய்து  செறிவூட்டிய  அரிசி வழங்குவதை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் இராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிர்வாகி குருசாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் வி. மயில்வாகனன், மாவட்ட நிர்வாகிகள் டி. நவநீதகிருஷ்ணன், ஆர் கருணாநிதி, ஏஐடியுசி மாவட்ட நிர்வாகி என். எஸ்.பெருமாள் ஆகியோர் பேசினர்.