நாகர்கோவில், மார்ச் 6- தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் மக்களிடையே ஊட்டச்சத்து உணவுகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் மாவட்ட அளவில் வட்டார அளவிலான ஊட்டச்சத்து உணவு போட்டி நாகர்கோவில் ஆயுர்வேத மருத்து வக்கல்லூரி வளாகத்தில் நடத்தப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் இருந்து மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் தாங்கள் தயார் செய்த ஊட்டச்சத்து உணவுகளுடன் கலந்து கொண்டனர். இந்த மாவட்ட அளவிலான ஊட்டச்சத்து உணவு போட்டியினை மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் பார்வையிட்டார். மேலும் அந்த கல்லூரி வளாகத்தில் உற்பத்தியா ளர் குழு உறுப்பினர்கள் மூலமாக நடத்தப்பட உள்ள பாரம்பரிய உணவகத்தை யும் (Mathi CAFÉ) திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இணை இயக்குநர்/திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோனி பெர்னான்டோ, ஆயுர்வேத மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர்.கிளாறன்டேவி, அனைத்து மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர்கள் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.