நாகர்கோவில். பிப்.19- கன்னியாகுமரி மாவட்ட விரைவு போக்குவரத்து சிஐடியு சங்க தொழிலாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.. தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்க ளின் ஊதிய ஒப்பந்தத்தை பேசி முடிக்க வேண்டும், ஓய்வு பெற் றோரின் அகவிலைப்படியை நிலுவையின்றி வழங்க வேண்டும், வாரிசு வேலை வழங்க வேண்டும்,காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஓய்வு பெறும் தினத் திலேயே பணபலன்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தொழிலாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடை பெற்றது. நாகர்கோவில் விரைவு போக்குவரத்து கழக பணி மனை முன் தொழிலாளர் சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் வாயிற் கூட்டம் நடைபெற்றது. பணிமனை தலைவர் சிவ சுப்பிரமணியம் தலைமை தாங்கினார் கோரிக்கைகளை விளக்கி மத்திய சங்க உதவி தலைவர் ஜான் ராஜன்,பணி மனை பொருளாளர் ஜான்ஸ் பின்னி,சிஐடியு மாவட்ட துணை தலைவர் பொன். சோபனராஜ் ஆகியோர் பேசி னர். பணியில் இருப்போரும் ஓய்வு பெற்ற தொழிலாளர்க ளும் திரளாக கலந்து கொண்டனர்.