districts

img

குஜிலியம்பாறைக்கு தேவை மகளிர் காவல்நிலையம்

திண்டுக்கல், ஜூலை 4- குஜிலியம்பாறையில் அனைத்து மகளிர்  காவல்நிலையம் அமைக்க வேண்டும் என்று மாதர் சங்க மாநாடு வலியுறுத்தியுள்ளது.  ஞாயிறன்று திண்டுக்கல் மாவட்டம் குஜி லியம்பாறையில் நடைபெற்ற மாதர் சங்க  நான்காவது ஒன்றிய மாநாட்டிற்கு பாக்கி யம், கத்திஜா, தனலட்சுமி தலைமை வகித்த னர். மாவட்டச்செயலாளர் ஜி.ராணி, மாநி லக்குழு உறுப்பினர் ஆர்.வனஜா, மாவட்டத் துணைத்தலைவர் எஸ்.எம்.பழனியம்மாள் ஆகியோர் கலந்துகொண்டனர்.  இந்த மாநாட்டில் ஒன்றியத்தலைவராக பாக்கியம், செயலாளராக வசந்தா, பொரு ளாளராக தனலட்சுமி, துணைத்தலைவர் களாக பானுப்பிரியா, லட்சுமி, துணைச்செய லாளர்களாக பாலாமணி, மணிமேகலை ஆகி யோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  குஜிலியம்பாறை பகுதியில் போதுமான நகர்ப் போருந்துகள் இயக்கப்படாததால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். பள்ளி மாணவ, மாணவரிகள் தங்கள் கல்வி  நிறுவனங்களுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. மாவட்ட நிர்வாகம் ஒன்றியத்தில் நகர்ப் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது. நிலக்கோட்டை நிலக்கோட்டையில் நடைபெற்ற ஒன்றிய மாநாட்டிற்கு ஒன்றியத்தலைவர் வள்ளி யம்மாள் தலைமை வகித்தார். ஒன்றியக் குழு உறுப்பினர் வெற்றிச்செல்வி வர வேற்றார். மாவட்டத் துணைத் தலைவர்  பாண்டியம்மன் முன்னிலை வைத்தார். மாவட்டச் செயலாளர் ராணி சிறப்புரையாற்றி னார். மாநாட்டில் நூறு நாள் வேலையை நூற்றி ஐம்பது நாளாக உயர்த்த வேண்டும் இந்தத்  திட்டத்தை பேரூராட்சிகளுக்கும் விரிவு படுத்த வேண்டும். பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என  மாநாட்டில் அரசை வலியுறுத்தினர். பிரேம லதா, பிச்சையம்மாள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாநாட்டில் ஒன்றிய தலைவராக வள்ளி யம்மாள் செயலாளராக பிரேமலதா பொரு ளாளராக பிச்சையம்மாள் ஆகியோர் தேர்வு  செய்யப்பட்டனர்.